Newsபணயக் கைதிகளை விடுவிக்க மறுக்கும் நெதன்யாகு

பணயக் கைதிகளை விடுவிக்க மறுக்கும் நெதன்யாகு

-

இஸ்ரேல் – ஹமாஸ்  இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி பல்வேறு கட்டங்களாக ஹமாஸ் – இஸ்ரேல் இடையே பணயக் கைதிகள் பரிமாற்றம் நடந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த 22ம் திகதி 6 இஸ்ரேலிய பணயக் கைதிகளை ஹமாஸ் விடுதலை செய்தது.  ஆனால் திட்டமிட்டபடி அவர்களுக்கு ஈடாக இஸ்ரேல் பிடித்துவைத்துள்ள பலஸ்தீன கைதிகளில் 650 பேரை விடுதலை செய்ய மறுத்துள்ளது. வரும் மார்ச் 1 ஆம் திகதியுடன் போர் நிறுத்தம் முடிவடைய உள்ள நிலையில் அடுத்தகட்ட அமைதிப் பேச்சுவார்த்தை கேள்விக்குறியாகி உள்ளது.

இதுதொடர்பாக இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில்

“ஹமாஸின் தொடர்ச்சியான மீறல்களைக் கருத்தில் கொண்டு நமது பணயக்கைதிகளை அவமதிக்கும் அவமானகரமான விழாக்கள் மற்றும் பணயக்கைதிகளை பிரச்சாரத்திற்காக இழிவாகப் பயன்படுத்துவதன் காரணமாக கடந்த 22ம் திகதி திட்டமிடப்பட்ட பலஸ்தீன கைதிகளின் விடுதலையை தாமதப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது ” என்று தெரிவித்துள்ளார்.

நேற்று 6 இஸ்ரேலிய கைதிகள் விடுவிக்கப்படும்போது அதில் ஒருவர் ஹமாஸ் அமைப்பினர் ஒருவருக்கு நெற்றியில் முத்தமிட்ட காட்சி வைரலானதை தொடர்ந்து இஸ்ரேல் இந்த முடிவை எடுத்துள்ளது.

இந்நிலையில் இஸ்ரேல் தொடர்ந்து ஒப்பந்தத்தை மீறி வருவதாக ஹமாஸ் மூத்த அதிகாரி பாஸ்ஸெம் நயீம் தெரிவித்தார்.

 இது தொடர்பாக அவர் கூறுகையில், “போர் நிறுத்தத்தின் முதல் கட்டத்தின் போது, இஸ்ரேலிய இராணுவம் 100  பலஸ்தீனர்களைக் கொன்றது.

இதுபோன்று தொடர்ந்து வரும் செயல்கள் ஒப்பந்தத்தை முறிக்கவும், மீண்டும் போருக்குத் திரும்புவதற்கான அதன் விருப்பத்தை வெளிப்படுத்தும் வலதுசாரி இஸ்ரேல் அரசாங்கத்தின் ஒரு மோசமான தந்திரம் என்று நாங்கள் கருதுகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

Latest news

தென்கிழக்கு ஆசியாவிற்கு பயணம் செய்யும் விக்டோரியர்களுக்கு சிறப்பு அறிவிப்பு

தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை காரணமாக ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் பெரும் ஆபத்தில் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி, லாவோஸில் உட்கொள்ளப்படும் மதுபானங்களில் சுமார்...

விக்டோரியா காவல்துறையின் பிரச்சினைகள் குறித்து வெளியான தகவல்

விக்டோரியா காவல் துறைக்குள் உள்ள பிரச்சினைகள் குறித்து அரசியல் அரங்கில் நிறைய விவாதங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக மாகாண நிழல் காவல் துறை அமைச்சர் டேவிட் சவுத்விக்...

பிரான்ஸில் கத்திக்குத்து – ஒருவர் பலி

பிரான்ஸ் நாட்டின் மல்ஹவுஸ் நகரில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸின் மல்ஹவுஸ் நகரிலுள்ள சந்தைப் பகுதியில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் போர்த்துக்கல்...

அதிக மருத்துவ மானியங்களை வழங்க தயாராகவுள்ள எதிர்க்கட்சி

ஆஸ்திரேலிய எதிர்க்கட்சியான லிபரல் கூட்டணி, Medicare-இல் 9 பில்லியன் டாலர்களை முதலீடு செய்வதாக தேர்தல் வாக்குறுதியை அளித்துள்ளது. மொத்த பில்லிங் சேவைக்குள் பல நெருக்கடிகள் இருப்பதாக எதிர்க்கட்சித்...

மிகவும் மோசமாகிவரும் போப்பின் உடல்நிலை

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புனித திருத்தந்தை பிரான்சிஸின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 88 வயதான போப் பிரான்சிஸுக்கு சுவாசிக்க உதவும்...

அதிக மருத்துவ மானியங்களை வழங்க தயாராகவுள்ள எதிர்க்கட்சி

ஆஸ்திரேலிய எதிர்க்கட்சியான லிபரல் கூட்டணி, Medicare-இல் 9 பில்லியன் டாலர்களை முதலீடு செய்வதாக தேர்தல் வாக்குறுதியை அளித்துள்ளது. மொத்த பில்லிங் சேவைக்குள் பல நெருக்கடிகள் இருப்பதாக எதிர்க்கட்சித்...