Newsடிக் டொக் செயலியை வாங்க அமெரிக்க நிறுவனங்கள் போட்டி

டிக் டொக் செயலியை வாங்க அமெரிக்க நிறுவனங்கள் போட்டி

-

டிக்டொக் செயலியை வாங்க அமெரிக்க நிறுவனங்களிடையே போட்டி அதிகரித்துள்ளது.

சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான டிக்டொக் செயலி மூலமாக அமெரிக்கர்களின் தனிப்பட்ட தகவல்களை சீன நிறுவனம் களவாடி வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்த நிலையில், டிக்டொக் செயலியை அமெரிக்க நிறுவனத்திடம் விற்பதற்கு ட்ரம்ப் அனுமதி வழங்கியிருந்தார். இதற்காக டிக்டொக்குக்கு 75 நாட்கள் கால அவகாசமும் அளித்திருந்தார். இதையடுத்து, ஆரக்கிள், வோல்மார்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் பைட்டான்ஸ் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன.

இந்த நிலையில் டிக்டொக் விவகாரம் குறித்து ட்ரம்ப் கூறியதாவது,

டிக்டொக்கை வாங்க நான்கு குழுமங்களிடையே போட்டி ஏற்பட்டுள்ளது. மேலும், பல நிறுவனங்களும் டிக்டொக்கை வாங்க ஆர்வம் காட்டி வரும் நிலையில், இறுதி முடிவை தான் ஆலோசித்து எடுக்கப்போவதாகவும், சீன தரப்பும் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளும் என்ற நம்பிக்கையிருப்பதாகவும் கூறினார்.

Latest news

எரிவாயுவை இறக்குமதி செய்யத் தயாராகி வரும் ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா எரிவாயு இறக்குமதி செய்யத் தயாராகி வருவதாக ஊடக அறிக்கைகள் மீது ஆளும் தொழிலாளர் கட்சி பொய் சொல்வதாக எதிர்க்கட்சியான லிபரல் அலையன்ஸ் குற்றம் சாட்டியுள்ளது. உலகின்...

3 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் சிவப்பாக மாறிய வானம்

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு வரும் வெள்ளிக்கிழமை ஒரு அரிய சிவப்பு நிற நிலவை ஆஸ்திரேலியர்கள் காணும் வாய்ப்பைப் பெறுவார்கள். இந்த நாளில், மற்ற நாட்களை பெரியதாகவும், சிவப்பு...

ஆஸ்திரேலியாவில் கூட்டாட்சித் தேர்தலுக்குப் பிறகு சிறுபான்மை அரசாங்கமா?

வரவிருக்கும் கூட்டாட்சித் தேர்தலுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் ஒரு சிறுபான்மை அரசாங்கம் உருவாகக்கூடும் என்று ஒரு புதிய கருத்துக் கணிப்பு வெளிப்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸின் பொது...

விக்டோரியாவில் வாகன உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள காவல்துறை

விக்டோரியா காவல்துறை வாகன உரிமையாளர்களுக்கு ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. விக்டோரியா முழுவதும் கார் திருட்டுகள் அதிகரிப்பதற்குப் பின்னால் தொழில்நுட்ப ஆர்வமுள்ள திருடர்கள் குழு இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கார்களின்...

ஆல்பிரட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் வழங்கும் நிவாரணம்

ஆல்பிரட் சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான பேரிடர் மீட்பு உதவித்தொகையை ஆளும் தொழிலாளர் கட்சி அரசாங்கம் அங்கீகரித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்களை இன்று (11) பிற்பகல் 2.00 மணி முதல்...

ஆஸ்திரேலியாவில் கூட்டாட்சித் தேர்தலுக்குப் பிறகு சிறுபான்மை அரசாங்கமா?

வரவிருக்கும் கூட்டாட்சித் தேர்தலுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் ஒரு சிறுபான்மை அரசாங்கம் உருவாகக்கூடும் என்று ஒரு புதிய கருத்துக் கணிப்பு வெளிப்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸின் பொது...