Newsஆஸ்திரேலியாவில் பாம்பை ஸ்கிப்பிங் கயிறாக்கி விளையாடிய சிறுவர்கள்

ஆஸ்திரேலியாவில் பாம்பை ஸ்கிப்பிங் கயிறாக்கி விளையாடிய சிறுவர்கள்

-

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் உள்ள வூராபிண்டா என்ற இடத்தில் சிறுவர்கள் சிலர் ஒரு இறந்த பாம்பை ஸ்கிப்பிங் கயிறாகப் பயன்படுத்தி விளையாடுவதைக் காட்டும் ஒரு வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் தீயாக பரவி வருகிறது.

இந்தச் சம்பவம் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள நிலையில் அந்நாட்டு சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுலா துறை குறித்த செயற்பாட்டை கண்டித்துள்ளது.

மேலும், இது தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருப்புத் தலை பைத்தான் என்பது அவுஸ்திரேலியாவில் பாதுகாக்கப்பட்ட உயிரினமாகும், இது விஷமற்றது மற்றும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த பாம்பை காயப்படுத்துவது அல்லது கொல்வது சட்டவிரோதமானது.

மேலும் இதற்காக அதிகபட்சமாக 12,615 அவுஸ்திரேலிய டொலர் அபராதம் விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

சிறுவர்கள் விளையாடிய பாம்பு முன்னரே இறந்திருந்ததா அல்லது அவர்களால் கொல்லப்பட்டதா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பபமாகியுள்ளன.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...