Newsஆஸ்திரேலியாவில் முழுமையான செயற்கை இதயம் பொருத்தி மருத்துவ சாதனை

ஆஸ்திரேலியாவில் முழுமையான செயற்கை இதயம் பொருத்தி மருத்துவ சாதனை

-

உலகின் முதன்முறையாக முழுமையான செயற்கை இதயம் பொருத்தப்பட்டு மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ள அவுஸ்திரேலிய நபர் ஒருவர் மருத்துவ வரலாற்றைப் படைத்துள்ளார்.

நியூ சவுத் வேல்ஸைச் சேர்ந்த 40 வயதுடைய குறித்த நோயாளி, அவுஸ்திரேலியாவில் இந்த முழுமையான செயற்கை இதயத்தைப் பெற்ற முதல் நபராக தானாக முன்வந்து சோதனைக்கு உட்படுத்திக்கொண்டார்.

அவருக்கு நவம்பர் 22ஆம் திகதி அந்தக் கருவி பொருத்தப்பட்டு பெப்ரவரியில் அதனுடன் வீடு திரும்பினார்.

இதேவேளை மார்ச் மாத தொடக்கத்தில் மாற்று அறுவை சிகிச்சைக்கு ஒரு நன்கொடையாளர் இதயம் கிடைத்து அறுவைச்சிகிச்சை இடம்பெற்று வீடு திரும்பியுள்ளார்.

அதேவேளை மார்ச் மாத தொடக்கத்தில் அவருக்கு நடைபெற்ற மாற்று இதய அறுவை சிகிச்சைக்கு முன்பாக, BiVACOR சாதனத்துடன் அந்த நோயாளி 100 நாட்களுக்கு மேல் உயிர் வாழ்ந்ததை அடுத்து இந்த சாதனை படைக்கப்பட்டது.

இந்த சாதனை செயல்முறையை சிட்னியின் செயிண்ட் வின்சென்ட் வைத்தியசாலையின் இருதய மற்றும் தொராசிக் அறுவை சிகிச்சை நிபுணர் பால் ஜான்ஸ் மேற்கொண்டார்.

இதுபோன்ற ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு அவுஸ்திரேலிய மருத்துவ மைல்கல்லில் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமைப்படுவதாக ஜான்ஸ் கூறினார்.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு நோயாளியின் கண்காணிப்புக்கு தலைமை தாங்கிய செயிண்ட் வின்சென்ட்ஸில் உள்ள இருதயநோய் நிபுணர் பேராசிரியர் கிறிஸ் ஹேவர்ட் கூறுகையில்,

“இந்த செயற்கை இதயம், இதய செயலிழப்புக்கு சிகிச்சையளிக்கும் போக்கையே மாற்றும் என்பதோடு 10 ஆண்டுகளில், தானம் செய்யப்பட்ட இதயங்களுக்காக காத்திருக்கவோ அல்லது பெறவோ முடியாதவர்களுக்கு இது ஒரு விருப்பமாக இருக்கும்” என்று அவர் கூறினார்.

குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் டேவிட் கோல்குஹவுனும் அதன் வெற்றியை “ஒரு சிறந்த தொழில்நுட்ப முன்னேற்றம்” என்று கூறியுள்ளார்.

Latest news

மியன்மார் இணையத்தள மோசடியிலிருந்து 549 பேர் மீட்பு

தாய்லாந்து - மியன்மார் எல்லையில் இணையத்தள மோசடி மையங்களில் சிக்கியிருந்த 549 பேர் மீட்கப்பட்டுள்ளனர். வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு வழங்குவதாக கூறி இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச்...

சட்டவிரோத புகையிலை வர்த்தகத்திற்கு எதிராக நடவடிக்கை – ஆஸ்திரேலிய அரசாங்கம்

சட்டவிரோத புகையிலை வர்த்தகத்தை எதிர்த்துப் போராடும் நோக்கத்துடன் ஆஸ்திரேலிய அரசாங்கம் மற்றொரு நிதியை வழங்கியுள்ளது. இதற்காக மத்திய அரசு 156.7 மில்லியன் டாலர்களை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணம்...

Deepseek செயலியை தொடந்து மோனிகா செயற்கை நுண்ணறிவு செயலியை உருவாக்கியுள்ள சீனா

சீனாவில் செயற்கை நுண்ணறிவு செயலி Deepseek செயலி மிகப்பெரிய அளவில் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது சீனாவில் இருந்து மோனிகா என்ற புதிய...

ஆஸ்திரேலியாவின் வரி விதிப்பு குறித்து டிரம்ப் கூறியது என்ன?

ஆஸ்திரேலியாவின் அலுமினியத் தொழிலுக்கு அமெரிக்கா விதித்த கட்டணங்களை குறைக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று வலியுறுத்தினார். அதன்படி, இறக்குமதி வரி இன்று முதல் அமல்படுத்தப்படும். இதற்கிடையில்,...

ஆஸ்திரேலியாவின் வரி விதிப்பு குறித்து டிரம்ப் கூறியது என்ன?

ஆஸ்திரேலியாவின் அலுமினியத் தொழிலுக்கு அமெரிக்கா விதித்த கட்டணங்களை குறைக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று வலியுறுத்தினார். அதன்படி, இறக்குமதி வரி இன்று முதல் அமல்படுத்தப்படும். இதற்கிடையில்,...

மிகவும் துர்நாற்றம் வீசும் நகரங்களில் மெல்பேர்ணின் 10 புறநகர்ப் பகுதிகள்

மெல்பேர்ணில் மிகவும் துர்நாற்றம் வீசும் 10 பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. விக்டோரியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து பெறப்பட்ட துர்நாற்ற புகார்களின் அடிப்படையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையத்தால் இந்த தரவு...