Newsஆஸ்திரேலியாவில் முழுமையான செயற்கை இதயம் பொருத்தி மருத்துவ சாதனை

ஆஸ்திரேலியாவில் முழுமையான செயற்கை இதயம் பொருத்தி மருத்துவ சாதனை

-

உலகின் முதன்முறையாக முழுமையான செயற்கை இதயம் பொருத்தப்பட்டு மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ள அவுஸ்திரேலிய நபர் ஒருவர் மருத்துவ வரலாற்றைப் படைத்துள்ளார்.

நியூ சவுத் வேல்ஸைச் சேர்ந்த 40 வயதுடைய குறித்த நோயாளி, அவுஸ்திரேலியாவில் இந்த முழுமையான செயற்கை இதயத்தைப் பெற்ற முதல் நபராக தானாக முன்வந்து சோதனைக்கு உட்படுத்திக்கொண்டார்.

அவருக்கு நவம்பர் 22ஆம் திகதி அந்தக் கருவி பொருத்தப்பட்டு பெப்ரவரியில் அதனுடன் வீடு திரும்பினார்.

இதேவேளை மார்ச் மாத தொடக்கத்தில் மாற்று அறுவை சிகிச்சைக்கு ஒரு நன்கொடையாளர் இதயம் கிடைத்து அறுவைச்சிகிச்சை இடம்பெற்று வீடு திரும்பியுள்ளார்.

அதேவேளை மார்ச் மாத தொடக்கத்தில் அவருக்கு நடைபெற்ற மாற்று இதய அறுவை சிகிச்சைக்கு முன்பாக, BiVACOR சாதனத்துடன் அந்த நோயாளி 100 நாட்களுக்கு மேல் உயிர் வாழ்ந்ததை அடுத்து இந்த சாதனை படைக்கப்பட்டது.

இந்த சாதனை செயல்முறையை சிட்னியின் செயிண்ட் வின்சென்ட் வைத்தியசாலையின் இருதய மற்றும் தொராசிக் அறுவை சிகிச்சை நிபுணர் பால் ஜான்ஸ் மேற்கொண்டார்.

இதுபோன்ற ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு அவுஸ்திரேலிய மருத்துவ மைல்கல்லில் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமைப்படுவதாக ஜான்ஸ் கூறினார்.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு நோயாளியின் கண்காணிப்புக்கு தலைமை தாங்கிய செயிண்ட் வின்சென்ட்ஸில் உள்ள இருதயநோய் நிபுணர் பேராசிரியர் கிறிஸ் ஹேவர்ட் கூறுகையில்,

“இந்த செயற்கை இதயம், இதய செயலிழப்புக்கு சிகிச்சையளிக்கும் போக்கையே மாற்றும் என்பதோடு 10 ஆண்டுகளில், தானம் செய்யப்பட்ட இதயங்களுக்காக காத்திருக்கவோ அல்லது பெறவோ முடியாதவர்களுக்கு இது ஒரு விருப்பமாக இருக்கும்” என்று அவர் கூறினார்.

குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் டேவிட் கோல்குஹவுனும் அதன் வெற்றியை “ஒரு சிறந்த தொழில்நுட்ப முன்னேற்றம்” என்று கூறியுள்ளார்.

Latest news

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் ஏழைகளின் எண்ணிக்கை

ஆஸ்திரேலியாவில் வறுமை அதிகரித்து வருவதாக ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம் (UNSW) மற்றும் ஆஸ்திரேலிய சமூக சேவைகள் கவுன்சில் (ACOSS) நடத்திய...

Qantas ஹேக்கர்கள் குறித்த அரசாங்கத்தின் முடிவு

Qantas வாடிக்கையாளர் தரவு திருட்டுக்காக சைபர் குற்றவாளிகளுக்கு பணம் செலுத்தத் தயாராக இல்லை என்று ஆஸ்திரேலிய அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 5.7 மில்லியன் Qantas வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட...

ஆஸ்திரேலியாவின் பன்முக கலாச்சார சமூகங்களுக்கு அல்பானீஸ் முறையீடு

உலகெங்கிலும் உள்ள சில நாடுகளில் தற்போது நிகழும் இன மற்றும் மத மோதல்களைப் போல ஆஸ்திரேலியாவில் பல கலாச்சார சமூகங்கள் உருவாக்க வேண்டாம் என்று பிரதமர்...

குறைந்த வருமானம் பெறும் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் பற்றி நற்செய்தி

மத்திய அரசு, ஓய்வூதிய வரி விதிகளில் பல முக்கிய மாற்றங்களுடன் புதிய கொள்கைகளின் தொகுப்பை அறிவித்துள்ளது. இந்தப் புதிய முடிவின் கீழ், அடையப்படாத ஆதாயங்களுக்கு வரி விதிக்கும்...

சிட்னியில் ஒரு பல் மருத்துவருக்கு எய்ட்ஸ் பாதிப்பு என சந்தேகம்!

சிட்னியில் உள்ள ஒரு பல் மருத்துவர் அங்கீகரிக்கப்பட்ட சுகாதாரத் தரங்களைப் பின்பற்றத் தவறியதால் ஒரு பெரிய சிக்கல் எழுந்துள்ளது. இதன் விளைவாக, இந்த மருத்துவரிடம் சிகிச்சை...

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபர் ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேற்றம்

நான்கு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட Fiji நாட்டைச் சேர்ந்த ஒருவர் ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டதை அடுத்து பெரும் சர்ச்சை...