Newsமிகப்பெரிய மென்பொருள் மாற்றத்திற்கு தயாராகும் ஆப்பிள்

மிகப்பெரிய மென்பொருள் மாற்றத்திற்கு தயாராகும் ஆப்பிள்

-

ஆப்பிள், தனது iPhone, iPad மற்றும் Mac சாதனங்களுக்காக வரலாற்றில் மிகப்பெரிய மென்பொருள் புதுப்பிப்பை மேற்கொள்ள உள்ளதாக நிறுவன வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

iOS 19, iPadOS 19 (“Luck”) மற்றும் macOS 16 (“Cheer”) ஆகியவை இம்முறையில் வெளிவரும் புதிய பதிப்புகளாகும்.

இந்த புதுப்பிப்பு, சாதனங்களின் மென்பொருள் வடிவமைப்பை ஒருங்கிணைத்து, பயன்பாட்டை எளிதாக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

புதிய அப்டேட்டில் கொன்கள், மெனுக்கள், செயலிகள் மற்றும் கட்டுப்பாடு அமைப்புகள் மேம்படுத்தப்படவுள்ளன.

இது விஷன் ப்ரோ Vision Pro மென்பொருளின் வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்டிருக்கும்.

இந்த மாற்றம், ஜூன் மாதம் நடைபெறும் எனவும் Apple Worldwide Developers Conference (WWDC) நிகழ்ச்சியில் வெளியிடப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆப்பிளின் முக்கிய வருவாய் ஆதாரமான iPhone விற்பனை குறைந்துள்ளதால், இந்த புதுப்பிப்புகள் வாடிக்கையாளர்களின் ஆர்வத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகம் முழுவதிலும் சுமார் இரண்டு பில்லியன் ஆப்பிள் சாதனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

புதிய மென்பொருள் மாற்றம் தொடர்பில் ஆப்பிள் நிறுவனம் அதிகாரபூர்வ அறிவிப்பு எதனையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...