Sportsபோதைப்பொருள் வழக்கில் சிக்கிய ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர்

போதைப்பொருள் வழக்கில் சிக்கிய ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர்

-

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஆஸ்திரேலியா முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சிக்கியுள்ளார்.

1998 ஆம் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில், அவுஸ்திரேலியா அணிக்காக விளையாடியதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானவர் ஸ்டூவர்ட் மெக்கில்.

சுழற்பந்து வீச்சாளரான இவர், அவுஸ்திரேலியா அணிக்காக 44 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 208 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

2008 ஆம் ஆண்டு சர்வேதச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ஸ்டூவர்ட் மெக்கில்.

கடந்த 2021 ஆம் ஆண்டு, 3,30,000 அமெரிக்க டொலர் மதிப்பு 1 கிலோ அளவிலான கொக்கைன் எனும் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புள்ளதாக இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த வழக்கு சிட்னி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, “சிட்னியின் வடக்கு கடற்கரையில் உள்ள தனது உணவகத்தில் வைத்து, வழக்கமாக போதைப் பொருள் வழங்கும் நபரை தனது உறவினரான Marino Sotiropoulos என்பவருக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

இதன் மூலம் போதைப் பொருள் கடத்தப்பட்டதாகவும் மெக்கில் மீது குற்றம்சாட்டப்பட்டது. தனக்கு இதில் தொடர்பில்லை என இந்த குற்றச்சாட்டை மெக்கில் மறுத்துள்ளார். 

மெக்கிலின் ஈடுபாடு இல்லாமல் இந்த கடத்தல் நடைபெற்றிருக்க முடியாது என அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், இந்த வழக்கில் அவருக்கு ஈடுபாடு உள்ளதால் அதற்கேற்ற அளவிலான தண்டனையை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

அவருக்கான தண்டனை அறிவிப்பை 8 வாரங்களுக்கு தள்ளி வைத்துள்ளது.

Latest news

செயலிழப்பிற்குப் பிறகு மீட்டெடுக்கப்பட்ட Optus சேவைகள்

நியூ சவுத் வேல்ஸின் Hunter பகுதியில் ஏற்பட்ட மின் தடைகளுக்குப் பிறகு சேவைகள் மீட்டமைக்கப்பட்டுள்ளதாக Optus கூறுகிறது. Hexham – Maitland சாலையில் உள்ள ஒரு மொபைல்...

சீன BYDகளால் நிரம்பியுள்ள ஆஸ்திரேலிய கிடங்குகள்

ஆஸ்திரேலியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பிரபலமான சீன மின்சார காரான BYD வாகனங்கள், விற்பனை இல்லாததால் கிடங்குகளில் விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தால் வழங்கப்படவுள்ள புதிய வாகனத் திறன் தரநிலை...

இரண்டு வருடங்களில் வீட்டு விலைகள் வேகமாக உயரக் காரணம் இதுதான்!

அரசாங்கத்தின் முதல் வீடு வாங்கும் வைப்பு உத்தரவாதத் திட்டத்தின் காரணமாக, ஆஸ்திரேலியா முழுவதும் வீட்டு விலைகள் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேகமாக உயர்ந்துள்ளதாக புதிய...

ஆஸ்திரேலியர்களுக்கு 3 மணி நேரம் இலவச மின்சாரம்

புதிய எரிசக்தி திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் இலவச சூரிய சக்தி மின்சாரம் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. “Solar Sharer” என்று...

இரண்டு வருடங்களில் வீட்டு விலைகள் வேகமாக உயரக் காரணம் இதுதான்!

அரசாங்கத்தின் முதல் வீடு வாங்கும் வைப்பு உத்தரவாதத் திட்டத்தின் காரணமாக, ஆஸ்திரேலியா முழுவதும் வீட்டு விலைகள் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேகமாக உயர்ந்துள்ளதாக புதிய...

ஆஸ்திரேலியர்களுக்கு 3 மணி நேரம் இலவச மின்சாரம்

புதிய எரிசக்தி திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் இலவச சூரிய சக்தி மின்சாரம் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. “Solar Sharer” என்று...