Sportsபோதைப்பொருள் வழக்கில் சிக்கிய ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர்

போதைப்பொருள் வழக்கில் சிக்கிய ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர்

-

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஆஸ்திரேலியா முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சிக்கியுள்ளார்.

1998 ஆம் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில், அவுஸ்திரேலியா அணிக்காக விளையாடியதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானவர் ஸ்டூவர்ட் மெக்கில்.

சுழற்பந்து வீச்சாளரான இவர், அவுஸ்திரேலியா அணிக்காக 44 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 208 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

2008 ஆம் ஆண்டு சர்வேதச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ஸ்டூவர்ட் மெக்கில்.

கடந்த 2021 ஆம் ஆண்டு, 3,30,000 அமெரிக்க டொலர் மதிப்பு 1 கிலோ அளவிலான கொக்கைன் எனும் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புள்ளதாக இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த வழக்கு சிட்னி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, “சிட்னியின் வடக்கு கடற்கரையில் உள்ள தனது உணவகத்தில் வைத்து, வழக்கமாக போதைப் பொருள் வழங்கும் நபரை தனது உறவினரான Marino Sotiropoulos என்பவருக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

இதன் மூலம் போதைப் பொருள் கடத்தப்பட்டதாகவும் மெக்கில் மீது குற்றம்சாட்டப்பட்டது. தனக்கு இதில் தொடர்பில்லை என இந்த குற்றச்சாட்டை மெக்கில் மறுத்துள்ளார். 

மெக்கிலின் ஈடுபாடு இல்லாமல் இந்த கடத்தல் நடைபெற்றிருக்க முடியாது என அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், இந்த வழக்கில் அவருக்கு ஈடுபாடு உள்ளதால் அதற்கேற்ற அளவிலான தண்டனையை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

அவருக்கான தண்டனை அறிவிப்பை 8 வாரங்களுக்கு தள்ளி வைத்துள்ளது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...