Newsட்விட்டர் இலச்சினையை ஏலத்தில் விட முடிவு

ட்விட்டர் இலச்சினையை ஏலத்தில் விட முடிவு

-

ட்விட்டர் நிறுவனத்துக்குச் சொந்தமான 250 கிலோ எடை கொண்ட நீலநிற பறவை இலச்சினையை ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவைத் தலைமையிடமாகக் கொண்டு செயற்பட்டுவந்த ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் விலைக்கு வாங்கி எக்ஸ் எனப் பெயர் மாற்றம் செய்தார். அதன் பிறகு எக்ஸ் பக்கத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன.

இதனிடையே ஆரம்பத்தில் பயன்படுத்தப்பட்ட ட்விட்டர் நிறுவனத்தின் நீல நிறப் பறவை இலச்சினையை ஏலத்திற்கு விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஏலத்தின் ஆரம்ப விலையாக 21,664 டொலர் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏலம் எடுப்பவர்கள் இலச்சினையை எடுத்துச் செல்லும் போக்குவரத்து செலவுக்கும் சேர்த்து பணம் செலுத்த வேண்டும் என ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த இலச்சினை 12 அடி உயரமும் 8 அடி அகலமும் கொண்டது. இதன் எடை 254 கிலோ ஆகும் . இந்த ஏலமானது மார்ச் 20ஆம் திகதி வரை நடைபெறும் என்றும் அதன் பிறகு அதிக தொகை கோரியவர்களுக்கு இலச்சினை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

அதிக சம்பள எதிர்பார்ப்புகளுடன் வாழும் ஆஸ்திரேலிய மாநிலம்

ஆஸ்திரேலியர்கள் தற்போது பெறுவதை விட அதிக சம்பளத்தை எதிர்பார்க்கிறார்கள் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. இந்த ஆய்வை Finder நடத்தியது. கணக்கெடுப்பில் பங்கேற்ற ஆயிரம் பேர்,...

புதிய அவதாரம் எடுத்துள்ள ஆஸ்திரேலியாவின் ATD கார்டு

ஆஸ்திரேலியாவிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்காக ஒரு டிஜிட்டல் பைலட் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தொடக்கமாக, இந்த டிஜிட்டல் பயண அறிவிப்பு (ATD) அட்டை குயின்ஸ்லாந்து தலைநகரில் தரையிறங்கும்...

12 உயிர்களைப் பலிகொண்ட பயங்கர விமான விபத்து

ஹோண்டுராஸின் கரீபியன் கடற்கரையில் பறந்து கொண்டிருந்த விமானம் விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் விமானத்தில் இருந்த சுமார் 12 பேர் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹோண்டுரான் காவல்துறை...

உக்ரைன் அமைதி ஒப்பந்தம் குறித்து புடின்-டிரம்ப் முடிவு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இடையே இன்று காலை தொலைபேசி உரையாடல் நடைபெற்றது. ரஷ்ய ஜனாதிபதி உடனடியாக முழுமையான போர்நிறுத்தத்தை...

மெல்பேர்ணில் தெற்காசிய நபர் ஒருவரை தேடும் காவல்துறை

மெல்பேர்ணில் பேருந்தில் நடந்த பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபரைத் தேடும் நடவடிக்கையை போலீசார் தொடங்கியுள்ளனர். இந்த சம்பவம் பெப்ரவரி 17 ஆம் திகதி காலை சுமார்...

உக்ரைன் அமைதி ஒப்பந்தம் குறித்து புடின்-டிரம்ப் முடிவு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இடையே இன்று காலை தொலைபேசி உரையாடல் நடைபெற்றது. ரஷ்ய ஜனாதிபதி உடனடியாக முழுமையான போர்நிறுத்தத்தை...