NewsSamsung நிறுவனத்தின் இணை தலைமை அதிகாரி காலமானார்

Samsung நிறுவனத்தின் இணை தலைமை அதிகாரி காலமானார்

-

Samsung எலக்ட்ரோனிக்ஸ் நிறுவனத்தின் இணை தலைமை நிர்வாக அதிகாரியான ஹான் ஜாங் ஹீ மாரடைப்பு காரணமாக 63 வயதில் உயிரிழந்துள்ளார்.

மாரடைப்பு காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக சம்சுங் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இவர் Samsung நிறுவனத்தின் நுகர்வோர் மின்னணுவியல் மற்றும் மொபைல் சாதனங்கள் பிரிவின் பொறுப்பாளராகக் கடமையாற்றியுள்ளார்.

இவர் 1988 ஆம் ஆண்டு சம்சுங் எலக்ட்ரோனிக்ஸ் நிறுவனத்தில் இணைந்த ஹான், தொலைக்காட்சி வியாபாரத்தில் தனது வாழ்க்கையை ஆரம்பித்தார். சுமார் 19 வருடங்களாக உலகின் முன்னணி தொலைக்காட்சி நிறுவனமான Samsung-இன் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகித்தார்.

தொடர்ந்து அவர், DX பிரிவை வழிநடத்தி, சம்சுங்கின் தொலைக்காட்சி, வீட்டு உபகரணங்கள் மற்றும் ஸ்மார்ட் போன் வணிகங்களையும் மேற்பார்வை செய்தார்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...