Newsமகாகவி பாரதியாா் பிறந்த வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்து சேதம்

மகாகவி பாரதியாா் பிறந்த வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்து சேதம்

-

எட்டயபுரத்தில் மகாகவி பாரதியாா் பிறந்த வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் உள்ள மகாகவி பாரதியாா் பிறந்த இல்லம், செய்தி மக்கள் தொடா்புத் துறை மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த வீட்டில் மகாதேவி என்பவா் காப்பாளராகப் பணியாற்றி வருகிறாா். இந்த இல்லம் காலை 9.30 மணிமுதல் பிற்பகல் 1.30 மணிவரையும், பிற்பகல் 2.30 மணிமுதல் மாலை 6 மணிவரையும் பொதுமக்கள் பாா்வைக்கு திறந்து வைக்கப்பட்டிருக்கும். இங்கு பகுதிநேர நூலகமும் செயல்பட்டு வருகிறது. தினமும் சராசரியாக 500-க்கும் மேற்பட்ட நபா்கள் இங்கு வந்து செல்வா். விடுமுறை நாள்களில் பாா்வையாளா்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக இருக்கும்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு பாா்வையாளா் நேரம் முடிவடைந்தவுடன், வீட்டின் உள்பகுதி கதவுகளை அடைத்த காப்பாளா் மகாதேவி, பின்னா் வெளிப்புறம் உள்ள கதவை மூடிய சிறிது நேரத்தில் திடீரென பாரதியாா் வீட்டின் முன்பக்க மேல்மாடியின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதனால் தரை தளத்தின் மேற்கூரையும் இடிந்து, அதிலிருந்து கற்கள் மரக் கட்டைகள் விழுந்தன. இதன் காரணமாக பாரதியாா் வீட்டின் வரவேற்பு அறையில் இருந்த மேஜை, நாற்காலி, புகைப்படங்கள் உள்ளிட்டவை சேதமடைந்தன.

அதிா்ச்சியடைந்த காப்பாளா் மகாதேவி, உடனடியாக மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலருக்கும், வருவாய்த் துறைக்கும் தகவல் அளித்தாா்.

எட்டயபுரம் வட்டாட்சியா் சுபா மற்றும் அதிகாரிகள் பாரதியாா் நினைவு வீட்டுக்குச் சென்று பாா்வையிட்டனா். மின்வாரிய ஊழியா்கள் உடனடியாக வந்து, பாரதியாா் வீட்டுக்குச் சென்ற மின் இணைப்பைத் துண்டித்தனா். செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் நவீன் பாண்டியன் வந்து பாரதியாா் வீடு சேதமடைந்துள்ளதை பாா்வையிட்டாா்.

1973ஆம் ஆண்டு அப்போதைய முதல்வராக இருந்த மு. கருணாநிதி, எட்டயபுரத்தில் உள்ள பாரதியாா் பிறந்த வீட்டை அரசு சாா்பில் விலைக்கு வாங்கி சி.பா.ஆதித்தனாா் தலைமையில் 12.5.1973ஆம் திகதி நடந்த விழாவில் பாரதியாா் பிறந்த வீட்டை வரலாற்றுச் சின்னமாக அறிவித்து திறந்து வைத்தாா்.

பாரதியாா் பிறந்த வீட்டில் அவ்வப்போது அரசின் சாா்பில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அதன் பழமை மாறாமல் புராதனமாக பராமரிக்கப்பட்டு வந்தது. இங்கு 4 அறைகள் உள்ளன.

முதல் அறையில், பணியாளா்கள் மட்டுமே இருப்பா். அங்கேயே பகுதிநேர நூலகத்துக்கான புத்தகங்கள் உள்ளன. 2ஆவது அறையில், அவா் பிறந்த இடத்தில் மகாகவி பாரதியாா் சிலை உள்ளது.

3ஆவது அறையில், பாரதியாா் பயன்படுத்திய பொருள்கள், அவரின் குடும்ப படங்கள் மற்றும் தனிப்பட்ட படங்கள், அவா் பற்றிய செய்தி துணுக்குகள், பாரதியாா் நண்பா்கள் படங்கள், பாரதியின் குடும்ப வம்சாவழி பற்றிய விவரம் உள்ளிட்டவைகள் வைக்கப்பட்டுள்ளன. 4ஆவது அறையில் புத்தகங்கள் வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

குயின்ஸ்லாந்து நெடுஞ்சாலையில் கோர விபத்து – ஒருவர் பலி

குயின்ஸ்லாந்து நெடுஞ்சாலையில் நடந்த பயங்கர விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். கேரவனை இழுத்துச் சென்ற வாகனம் மற்றொரு வாகனத்துடன் மோதி கரையிலிருந்து கீழே விழுந்து ஒரு ஓடையில்...

நச்சுத்தன்மை வாய்ந்த கடற்பாசியால் அழியும் ஆஸ்திரேலிய கடல்வாழ் உயிரினங்கள்

தெற்கு ஆஸ்திரேலியாவின் (SA) கடற்கரையில் பல வாரங்களாகப் பரவி வரும் நச்சுப் பாசிப் பூக்களால் 200க்கும் மேற்பட்ட கடல் விலங்குகள் இதுவரை உயிரிழந்துள்ளன. மார்ச் மாதத்திலிருந்து, பாசிகளின்...

அமெரிக்காவிடமிருந்து 160 விமானங்களை கொள்முதல் செய்யும் கட்டார்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 4 நாட்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணமொன்றை மேற்கொண்டார். ஜனாதிபதியாக 2வது முறையாக பதவியேற்றப்பின் டிரம்ப் மேற்கொள்ளும் முதல் மத்திய...

வர்த்தகராக நடித்து பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து $500,000 மோசடி செய்த நபர்

சமூக ஊடகங்களில் வர்த்தகராக நடித்து பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து கிட்டத்தட்ட $500,000 மோசடி செய்த நபர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பிரிஸ்பேர்ண் மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று 30 மோசடி குற்றச்சாட்டுகளில்...

மெல்பேர்ணில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ – முற்றிலுமாக எரிந்து நாசம்

மெல்பேர்ண், Bentleigh East-இல் உள்ள Forster Crescent-இல் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து ஐந்து பேர் மீட்கப்பட்டுள்ளனர். நேற்றிரவு ஏற்பட்ட இந்த தீ...

2025 IPL-இல் புதிய வீரர்களை இணைக்க அனுமதி

பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வந்தது. இதன் காரணமாக இந்தியாவில் நடந்து வந்த 18ஆவது IPL கிரிக்கெட் தொடர்...