Breaking Newsமியன்மாரில் மீண்டும் நிலநடுக்கம்

மியன்மாரில் மீண்டும் நிலநடுக்கம்

-

மியன்மார்-தாய்லாந்தில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மியான்மரின் மண்டலே நகரை மையமாக கொண்டு நேற்று காலை 11.50 மணிக்கு ரிச்டர் அளவில் 7.7 ஆக நிலநடுக்கம் உண்டானது.

பின்னர் 12 நிமிடம் கழித்து மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் (ரிச்டர் அளவு 6.4) ஏற்பட்டது. அதே அளவுக்கு அண்டை நாடான தாய்லாந்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும் தொடர்ந்து நிலஅதிர்வுகள் உண்டானது. கட்டடங்கள் பல தரைமட்டமாகின.

இன்று காலை மியான்மரின் இராணுவ ஆட்சிக்குழு வெளியிட்ட அறிக்கையில், நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 1002 பேர் பலியாகி உள்ளதாகவும் 2376 பேர் காயம் அடைந்து உள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில் மியன்மாரில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று மாலை 04.30 மணியளவில் மியன்மாரில் மீண்டும் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலநடுக்கமானது ரிச்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகியுள்ளது. மாண்டலே நகரை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக ஆப்கானிஸ்தானிலும் இன்று அதிகாலை 4.7 ரிச்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது

Latest news

இலங்கையில் மட்டக்களப்பில் ராமகிருஷ்ணா மிஷன் வழங்கும் Ditwah புயல் வெள்ள நிவாரணம்

இலங்கையில் மலையகம், வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு Ditwah சூறாவளி வெள்ள நிவாரணம் குறித்த புதுப்பிப்பு - மட்டக்களப்பில் ராமகிருஷ்ணா மிஷன் ($2500) இந்தக்...

Optus 000 இல் வெளிப்படுத்தப்பட்டுள்ள 10 குறைபாடுகள்

Optus Network மேம்படுத்தலின் போது ஏற்பட்ட Triple-0 செயலிழப்பு குறித்த அறிக்கையில் 10 குறைபாடுகள் கண்டறியப்பட்டன. இந்த மின்தடை 14 மணி நேரம் நீடித்ததாகவும், அவசர காலங்களில்...

நடைபாதையில் நடந்து சென்ற இளம் பெண்ணை கொலை செய்த ஓட்டுநர்

குயின்ஸ்லாந்தில் எட்டு பாதசாரிகள் கொண்ட குழுவில் காரை ஓட்டிச் சென்று 24 வயது நியூ சவுத் வேல்ஸ் பெண்ணைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர்...

100க்கும் மேற்பட்ட புத்தகக் கடை ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம்

ஆஸ்திரேலியாவின் இரண்டு பெரிய புத்தக விற்பனையாளர்களின் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். சில்லறை மற்றும் துரித உணவு தொழிலாளர்கள்...

பார்சிலோனா கால்பந்து வீரர் சுட்டுக் கொலை

ஈக்குவடாரில் உள்ள பார்சிலோனா டி குவாயாகில் கிளப்பின் கால்பந்து வீரரான Mario Alberto Pineida Martínez சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். Mario Alberto Pineida Martínez சர்வதேச...

Optus 000 இல் வெளிப்படுத்தப்பட்டுள்ள 10 குறைபாடுகள்

Optus Network மேம்படுத்தலின் போது ஏற்பட்ட Triple-0 செயலிழப்பு குறித்த அறிக்கையில் 10 குறைபாடுகள் கண்டறியப்பட்டன. இந்த மின்தடை 14 மணி நேரம் நீடித்ததாகவும், அவசர காலங்களில்...