Newsகஜகஸ்தானில் அரியவகை தாதுக்கள் கண்டுபிடிப்பு

கஜகஸ்தானில் அரியவகை தாதுக்கள் கண்டுபிடிப்பு

-

மத்திய ஆசியாவில் உள்ள நாடுகளிலொன்றான கஜகஸ்தானில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரியளவில் அரிய தாதுக்களின் படிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கஜகஸ்தான் நாட்டில் கரகண்டா பிராந்தியத்திற்குள் உள்ள குய்ரெக்டிகோல் என்ற பகுதியில் இந்த அரிய வகை தாது படிவங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதை அந்நாட்டின் தொழில் மற்றும் கட்டுமான அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

இந்த பிராந்தியத்தில் சுமார் ஒரு மில்லியன் தொன் அரிய உலோகங்கள் மற்றும் தாதுக்களின் படிவங்கள் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. நவீன மற்றும் பசுமை ஆற்றல் தொழில்நுட்பங்களை உருவாக்க இந்த தாதுக்கள் முக்கியமாகத் தேவைப்படுகிறது.

குய்ரெக்டிகோல் மட்டுமின்றி பெரிய ஜானா கஜகஸ்தான் என்ற பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் 300 மீட்டர் ஆழத்தில் 20 மில்லியன் தொன்களுக்கும் அதிகமான அரிய உலோகங்களின் படிவங்கள் இருப்பதாகவும் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

இந்த அரிய உலோகங்கள் மின்சார வாகனங்கள், காற்றாலை கருவிகள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் போன்ற தொழில்நுட்பங்களுக்கு இன்றியமையாதவையாக உள்ளன. இதன் தேவை சர்வதச அளவில் அதிகரித்து வருகிறது. தற்போது சீனா மட்டுமே இதில் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், அதற்குப் போட்டியாக கஜகஸ்தானின் இந்த கண்டுபிடிப்பு இருக்கிறது.

அதேநேரம் கஜகஸ்தானிடம் இந்த அரிய உலோகங்களை வெட்டி எடுக்கத் தேவையான தொழில்நுட்பம் இல்லை. மேலும், பிரித்தெடுத்தல் உள்ளிட்ட இதர பணிகளுக்கான உட்கட்டமைப்பும் இல்லை. இதனால் கஜகஸ்தான் அரசு வெளிநாட்டு முதலீட்டைக் கோரி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Latest news

2026 முதல் விக்டோரியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வார இறுதிப் பயணங்கள்

விக்டோரியா மாநிலம் அடுத்த ஆண்டு முதல் மாற்றுத்திறனாளிகளுக்கு வார இறுதி நாட்களில் இலவச பொதுப் போக்குவரத்து சேவைகளை வழங்க திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் "Fairer Fares for...

ஹொங்கொங், சிங்கப்பூரில் வேகமடையும் கொரோனா புதிய அலை

ஆசிய நாடுகளில் கொரோனா புதிய அலை பரவிவரும் நிலையில் ஹொங்கொங் மற்றும் சிங்கப்பூரில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 2019-ல் சீனாவில் தோன்றிய கொரோனா...

NSW நெடுஞ்சாலையில் நூற்றுக்கணக்கான கார்களை சேதப்படுத்திய உலோகத் துண்டுகள்

நியூ சவுத் வேல்ஸில் உள்ள ஒரு பெரிய சாலையில் சுமார் 840 கிலோகிராம் உலோகத் துண்டுகளை ஒரு லாரி கொட்டியதில், 300க்கும் மேற்பட்ட கார்களின் டயர்கள்...

NSW நெடுஞ்சாலையில் நடந்த பயங்கர விபத்து – இருவர் உயிரிழப்பு 

NSW தூர தெற்கு கடற்கரையில் நடந்த ஒரு பயங்கர நெடுஞ்சாலை விபத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். இன்று பிற்பகல் 1.45 மணியளவில் Eden பகுதியில் உள்ள Princes...

பிரிஸ்பேர்ணில் ஐ.நா. அமைதி காக்கும் பயிற்சி மையத்தைத் தொடங்கியது ஆஸ்திரேலியா

பசிபிக் தீவு காவல்துறையினரை ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படையினராக மாற்றுவதற்கு பயிற்சி அளிக்கும் உலகின் முதல் திட்டத்தை ஆஸ்திரேலியா தொடங்கியுள்ளது. ஆஸ்திரேலியா வெறும் அண்டை...

சிட்னி துறைமுகத்தில் பயணக் கப்பலின் நங்கூரமிடும் கயிறில் ஏறிய நபர்

சிட்னி துறைமுகத்தில் ஒரு பயணக் கப்பலின் நங்கூரமிடும் கயிறுகளில் ஏறிய ஒரு நபரை பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று பிற்பகல் 3 மணியளவில், Carnival Adventure பயணக் கப்பலை...