Newsஇந்தியாவில் இருந்து வெளியேறிய அப்பிள் நிறுவனம்

இந்தியாவில் இருந்து வெளியேறிய அப்பிள் நிறுவனம்

-

வரிவிதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ளும் வகையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அப்பிள் வகை கையடக்கத் தொலைபேசிகளை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் பணிகளில் அப்பிள் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பரஸ்பர வரி விதிப்பை அமுல்படுத்தியதைத் தொடர்ந்து அப்பிள் நிறுவனம் இந்நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

இதன் ஒருபகுதியாக, அப்பிள் நிறுவனம் தனக்குச் சொந்தமான 5 விமானங்களில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அப்பிள் வகை கையடக்கத் தொலைபேசிகளை இடமாற்றம் செய்துள்ளது .

டொனால்ட் ட்ரம்ப், அதிக வணிகத்தை மேற்கொள்ளும் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு அதிக வரியை விதித்து வருகிறார்.

அதிக வரி வசூலிக்கும் இந்தியா, சீனா, மெக்சிகோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த நாடுகளுக்கு 10% பரஸ்பர வரி விதிப்பை ஏப். 5 முதல் அமுலுக்குக் கொண்டுவந்தார்.

இதன்படி இந்த நாடுகளில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும்.

இந்த வரி விதிப்பில் இருந்து தப்பிக்கும் வகையில் தற்காலிகத் தீர்வை அப்பிள் நிறுவனம் எடுத்துள்ளது. அதாவது, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அப்பிள் வகை கையடக்கத் தொலைபேசிகளை அமெரிக்காவுக்கு எடுத்துச் செல்ல அப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

திருத்தப்பட்ட வரி விதிப்பால் சர்வதேச வணிகக் கொள்கைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு வரும் நிலையில், அமெரிக்க சந்தைகளில் சில்லறை விற்பனையில் எந்தவித மாற்றங்களையும் கொண்டுவந்துவிடக் கூடாது என்பதற்காக அப்பிள் நிறுவனம் இந்த முயற்சியை எடுத்துள்ளது.

இது தற்காலிகத் தீர்வாக இருக்குமே தவிர, நிரந்தர தீர்வாக அமையாது எனவும் அப்பிள் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...