Newsஇந்தியாவில் இருந்து வெளியேறிய அப்பிள் நிறுவனம்

இந்தியாவில் இருந்து வெளியேறிய அப்பிள் நிறுவனம்

-

வரிவிதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ளும் வகையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அப்பிள் வகை கையடக்கத் தொலைபேசிகளை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் பணிகளில் அப்பிள் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பரஸ்பர வரி விதிப்பை அமுல்படுத்தியதைத் தொடர்ந்து அப்பிள் நிறுவனம் இந்நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

இதன் ஒருபகுதியாக, அப்பிள் நிறுவனம் தனக்குச் சொந்தமான 5 விமானங்களில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அப்பிள் வகை கையடக்கத் தொலைபேசிகளை இடமாற்றம் செய்துள்ளது .

டொனால்ட் ட்ரம்ப், அதிக வணிகத்தை மேற்கொள்ளும் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு அதிக வரியை விதித்து வருகிறார்.

அதிக வரி வசூலிக்கும் இந்தியா, சீனா, மெக்சிகோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த நாடுகளுக்கு 10% பரஸ்பர வரி விதிப்பை ஏப். 5 முதல் அமுலுக்குக் கொண்டுவந்தார்.

இதன்படி இந்த நாடுகளில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும்.

இந்த வரி விதிப்பில் இருந்து தப்பிக்கும் வகையில் தற்காலிகத் தீர்வை அப்பிள் நிறுவனம் எடுத்துள்ளது. அதாவது, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அப்பிள் வகை கையடக்கத் தொலைபேசிகளை அமெரிக்காவுக்கு எடுத்துச் செல்ல அப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

திருத்தப்பட்ட வரி விதிப்பால் சர்வதேச வணிகக் கொள்கைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு வரும் நிலையில், அமெரிக்க சந்தைகளில் சில்லறை விற்பனையில் எந்தவித மாற்றங்களையும் கொண்டுவந்துவிடக் கூடாது என்பதற்காக அப்பிள் நிறுவனம் இந்த முயற்சியை எடுத்துள்ளது.

இது தற்காலிகத் தீர்வாக இருக்குமே தவிர, நிரந்தர தீர்வாக அமையாது எனவும் அப்பிள் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டுக்கு தடை விதித்த தலிபான்கள்!

ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டை தடை செய்வதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த 2021-ல் வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இதனையடுத்து,...

வீட்டுவசதி மற்றும் வாழ்க்கைச் செலவுகளுக்கு மத்தியில் விலங்கு நலனுக்காக $4 மில்லியன்

நாய் பந்தயங்களை நடத்தும் Bundaberg greyhound பாதையை மேம்படுத்துவதற்கு 4 மில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் Tim Mander  அறிவித்தார். 3 மாத காலத்திற்குள் 42 நாய்கள்...

நிவாரணம் கோரும் விக்டோரிய விவசாயிகள்

விக்டோரியா மாநில விவசாயிகள் வறண்ட வானிலையால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு நிவாரணம் வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். Metcalfe பகுதியிலும், பல பிராந்தியங்களிலும் உள்ள விவசாயிகள் குடிநீர் பற்றாக்குறையால் பல...

விக்டோரியாவில் தீ விபத்தில் நாசமான பிரபலமான ஹோட்டல்

விக்டோரியாவில் உள்ள பிரபலமான ஹோட்டலான Churchill ஹோட்டலில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்து முற்றிலுமாக நாசமானது. இந்த தீ விபத்து காரணமாக நகரம் முழுவதும் அதிக...

பாகிஸ்தான் சென்று திரும்பியவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள தட்டம்மை எச்சரிக்கை

விக்டோரியாவில் ஆபத்தான தட்டம்மை வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானுக்குச் சென்று திரும்பிய பயணி ஒருவருக்கு விக்டோரியா ஹெல்த் அவசர எச்சரிக்கையை விடுத்துள்ளது. மெல்பேர்ண் நகரத்தில்...

சிட்னி மெட்ரோ சுரங்கப்பாதை தோண்டும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க கலைப்பொருட்கள்

சிட்னியின் Hunter Street மெட்ரோ தளத்தில் நூற்றுக்கணக்கான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அவற்றில் முதல் காலனித்துவ வணிகர்களில் ஒருவருக்குச் சொந்தமான சொத்தின் எச்சங்களும் அடங்கும். குறித்த இடத்தின்...