Breaking Newsஇன்ஸ்டா ரீல்ஸ் கண்களுக்கு ஆபத்து - எச்சரிக்கும் வைத்தியர்கள்!

இன்ஸ்டா ரீல்ஸ் கண்களுக்கு ஆபத்து – எச்சரிக்கும் வைத்தியர்கள்!

-

Instagram Reels, பேஸ்புக்கிலுள்ள சிறு காணொளி போன்ற குறுங்காணொளிகளைப் பார்ப்பது நீண்டகால நோக்கில் கண்களின் நலனைப் பாதிக்கும் என்று கண் வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

உலக அளவில் 200 கோடிப் பேர் Instagram செயலியைப் பயன்படுத்துகின்றனர்.இவர்களில் சுமார் 73 கோடிப் பேர் Insta Reels-ஐ அதிகமாகக் காண்கின்றனர்.

Insta பயனர்கள், செயலியைப் பயன்படுத்தும் 50 சதவீத நேரத்தை Reels பார்ப்பதில் செலவிடுவதாக Meta நிறுவனம் வெளியிட்ட தரவுகள் கூறுகின்றன.

இந்நிலையில் கண்கள் உலர்ந்துபோவது, கிட்டப்பார்வை, மாறுகண் போன்ற பிரச்சினைகள் இளைஞர்களிடையே அதிகரித்திருப்பதாக வைத்தியர்கள் கூறுகின்றனர்.

Reels உள்ளிட்ட குறுங்காணொளிகள் பளிச்சென்ற ஒளி அமைப்புகளுடனும் வேகமாக நகரும் காட்சிகளுடனும் படம்பிடிக்கப்படுகின்றன. இத்தகைய அம்சங்கள், பார்வையாளர்கள் இவற்றை நீண்டநேரம் பார்க்கத் தூண்டுகின்றன.

குறுங்காணொளிகளை நீண்ட நேரம் பார்ப்பதால், கண்களைச் சிமிட்டும் விகிதம் 50 சதவீதம் குறைவதாகவும், இதன்மூலம் கண்ணீர் சுரப்பு பாதிக்கப்பட்டு கண்கள் உலர்வடையும் என்றும் வைத்தியர்கள் எச்சரிக்கின்றனர்.

Latest news

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக 5 டன் சட்டவிரோத புகையிலை பொருட்கள் கண்டுபிடிப்பு

ஆஸ்திரேலியாவின் தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் 5 டன்களுக்கும் அதிகமான சட்டவிரோத புகையிலை பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய கூட்டாட்சி காவல்துறை (AFP), ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட...

ஆஸ்திரேலியாவில் மின்சாரத்தால் இயக்கப்படும் கனமான லாரிகள்

ஆஸ்திரேலியாவின் மிக அதிக எடை கொண்ட லாரிகள் புதிய மின்சார அமைப்பில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள், ஆஸ்திரேலியாவின் போக்குவரத்துத் துறை நாட்டின் முன்னணி காற்று...

ஆஸ்திரேலியாவில் உள்ள குழந்தைகளுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவரும் HIPPY திட்டம்

பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் முதல் ஆசிரியராக இருக்க அதிகாரம் அளிக்கும் HIPPY என்ற புதிய திட்டம் ஆஸ்திரேலியாவில் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது. இது "Home Interaction Program...

கிறிஸ்தவர்களைக் கொல்வது தொடர்பாக நைஜீரியாவை மிரட்டும் டிரம்ப்

கிறிஸ்தவர்களைக் கொல்வதையும் துன்புறுத்துவதையும் நைஜீரியா நிறுத்தாவிட்டால், அதற்கு எதிராக இராணுவத்தை அனுப்புவேன் என்று டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இந்த மனிதாபிமானமற்ற தாக்குதல்களை நைஜீரிய அரசாங்கம் அனுமதிக்கக் கூடாது...

ராட்சத ஆலங்கட்டி மழையால் 9 பேர் காயம்

பிரிஸ்பேர்ண் மற்றும் தென்கிழக்கு குயின்ஸ்லாந்தில் புயல் காரணமாக ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. சனிக்கிழமை பிற்பகல் Esk State பள்ளியின் 150வது ஆண்டு விழாவைத் தாக்கிய ஆலங்கட்டி...

கிறிஸ்தவர்களைக் கொல்வது தொடர்பாக நைஜீரியாவை மிரட்டும் டிரம்ப்

கிறிஸ்தவர்களைக் கொல்வதையும் துன்புறுத்துவதையும் நைஜீரியா நிறுத்தாவிட்டால், அதற்கு எதிராக இராணுவத்தை அனுப்புவேன் என்று டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இந்த மனிதாபிமானமற்ற தாக்குதல்களை நைஜீரிய அரசாங்கம் அனுமதிக்கக் கூடாது...