Breaking Newsஇன்ஸ்டா ரீல்ஸ் கண்களுக்கு ஆபத்து - எச்சரிக்கும் வைத்தியர்கள்!

இன்ஸ்டா ரீல்ஸ் கண்களுக்கு ஆபத்து – எச்சரிக்கும் வைத்தியர்கள்!

-

Instagram Reels, பேஸ்புக்கிலுள்ள சிறு காணொளி போன்ற குறுங்காணொளிகளைப் பார்ப்பது நீண்டகால நோக்கில் கண்களின் நலனைப் பாதிக்கும் என்று கண் வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

உலக அளவில் 200 கோடிப் பேர் Instagram செயலியைப் பயன்படுத்துகின்றனர்.இவர்களில் சுமார் 73 கோடிப் பேர் Insta Reels-ஐ அதிகமாகக் காண்கின்றனர்.

Insta பயனர்கள், செயலியைப் பயன்படுத்தும் 50 சதவீத நேரத்தை Reels பார்ப்பதில் செலவிடுவதாக Meta நிறுவனம் வெளியிட்ட தரவுகள் கூறுகின்றன.

இந்நிலையில் கண்கள் உலர்ந்துபோவது, கிட்டப்பார்வை, மாறுகண் போன்ற பிரச்சினைகள் இளைஞர்களிடையே அதிகரித்திருப்பதாக வைத்தியர்கள் கூறுகின்றனர்.

Reels உள்ளிட்ட குறுங்காணொளிகள் பளிச்சென்ற ஒளி அமைப்புகளுடனும் வேகமாக நகரும் காட்சிகளுடனும் படம்பிடிக்கப்படுகின்றன. இத்தகைய அம்சங்கள், பார்வையாளர்கள் இவற்றை நீண்டநேரம் பார்க்கத் தூண்டுகின்றன.

குறுங்காணொளிகளை நீண்ட நேரம் பார்ப்பதால், கண்களைச் சிமிட்டும் விகிதம் 50 சதவீதம் குறைவதாகவும், இதன்மூலம் கண்ணீர் சுரப்பு பாதிக்கப்பட்டு கண்கள் உலர்வடையும் என்றும் வைத்தியர்கள் எச்சரிக்கின்றனர்.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...