Newsஆஸ்திரேலியாவில் பரவும் புதிய நோய் - சுகாதார அவசரநிலை அறிவிப்பு

ஆஸ்திரேலியாவில் பரவும் புதிய நோய் – சுகாதார அவசரநிலை அறிவிப்பு

-

ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தில் பரவும் நிமோனியா வகை நோயினால் அரசு சுகாதார அவசரநிலை அறிவித்துள்ளது.

நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தில் புதிதாக 5 பேருக்கு Legionnaires எனும் நோயின் பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. மேலும், அவர்கள் 5 பேரும் சிட்னியின் மத்திய வர்த்தக மாவட்டத்திற்கு சென்று திரும்பியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட நோயாளிகள் அனைவக்கும் கடந்த மார்ச் 30 முதல் ஏப்ரல் 4 வரையிலான காலக்கட்டத்தில் இந்நோயிக்கான அறிகுறிகள் தென்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தத் தொற்று பரவியதற்கான மூலக்காரணம் என்னவென்று தெரியவராத நிலையில் அதனைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் சுகாதார அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக, Legionnaires என்பது Legionella எனும் நன்னீரில் வாழும் பாக்டீரியாவினால் ஏற்படும் ஒரு வகையான நிமோனியா காய்ச்சலாகும். இந்த பாக்டீரியாக்கல் மனித உடம்பினுள் சென்ற 2 – 10 நாள்களுக்குள் தலைவலி, காய்ச்சல் மற்றும் இருமல் போன்ற அறிகுறிகளை வெளிக்காட்ட துவங்கும் என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், காற்றில் பரவும் இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 5-10 சதவிகிதம் உயிரிழக்கும் அபாயமுள்ளதெனவும், நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களுக்கு இந்தப் பாதிப்பு ஏற்பட்டு அதற்கு முறையான சிகிச்சையளிக்கவில்லை என்றால் 80 சதவிகிதம் வரையில் உயிரிழக்கும் அபாயமுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest news

மாயமான பொம்மை, மரணமடைந்த அதிகாரி – Annabelle சாபமா?

Annabelle திரைப்படத்தில் வரும் பேய் பொம்மை மாயமாகியுள்ளதாக இணையத்தில் செய்திகள் வெளிவந்த நிலையில், குறித்த பொம்மையை ஆய்வு செய்த பிரபல அமானுஷ்ய ஆய்வாளர் Dan Rivera மர்மமான...

வடக்கு குயின்ஸ்லாந்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

வடக்கு குயின்ஸ்லாந்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். சனிக்கிழமை காலை 10 மணியளவில் Townsville-இல் உள்ள North Ward-இல் உள்ள Mitchell தெருவில் ஒரு...

ஆஸ்திரேலியாவில் சாதனை அளவை எட்டியுள்ள Influenza வழக்குகள்

சமீபத்திய தேசிய சுகாதார தரவுகளின்படி, குளிர்காலக் காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 50% அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் 431 வழக்குகள் பதிவாகியுள்ளதாக ஆஸ்திரேலிய சுவாச கண்காணிப்பு...

பாசி பரவல் தொடர்பாக மாநில அரசிடமிருந்து ஒரு கோரிக்கை

நச்சுப் பாசிகள் பரவுவதால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உதவி வழங்குமாறு தெற்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் மத்திய அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளது. தெற்கு ஆஸ்திரேலியாவின் கடற்கரையோரம் கடந்த மார்ச் மாதத்திலிருந்து...

டயர்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மில்லியன் கணக்கான டாலர் மதிப்புள்ள கோகைன் கண்டுபிடிப்பு

கார் டயர்களில் மறைத்து வைத்து 18 மில்லியன் டாலர் மதிப்புள்ள 56 கிலோகிராம் கோகைனை இறக்குமதி செய்ய முயன்ற தம்பதியினருக்கு 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவற்றை...

மெல்பேர்ணில் ஒரு முக்கிய நெடுஞ்சாலையில் விபத்து – பாதிக்கப்பட்ட போக்குவரத்து

மெல்பேர்ணில் உள்ள ஒரு முக்கிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்து காரணமாக பல சாலைகள் மூடப்பட்டுள்ளன. Monash தனிவழிப்பாதையில் ஒரு காரும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் இந்த விபத்து...