Newsஇந்து மதம் குறித்து தவறாக பேசினால் தண்டனை!

இந்து மதம் குறித்து தவறாக பேசினால் தண்டனை!

-

உலக நாடுகள் சிலவற்றில், குறிப்பிட்ட மதம் குறித்து அவதூறாக பேசினால் கடும் தண்டனை விதிக்கப்படும்.

ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இஸ்லாம் மதம் குறித்து விமர்சித்தால் மரண தண்டனை விதிக்குமளவுக்கு சட்டத்தில் இடம் உண்டு.

அதே போல், அமெரிக்கா மாகாணம் ஒன்று இந்து மதம் குறித்து அவதூறாக பேசுவதை குற்றமாக அங்கீகரிக்கும் வகையிலான மசோதா ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் கிட்டத்தட்ட 2.5 மில்லியன் இந்துக்கள் வசிப்பதாக கூறப்படுகிறது. இது அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில் 0.9% ஆகும். இதில் ஜோர்ஜியாவில் மட்டும் 40,000 க்கும் அதிகமான ஹிந்துக்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்காவில் முதல் மாகாணமாக ஜோர்ஜியாவில் இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மசோதா, இனம், நிறம், மதம் அல்லது தேசிய வம்சாவளியை அடிப்படையாகக் கொண்ட பாகுபாட்டைத் தடைசெய்யும் சட்டங்களின் கீழ் இந்து வெறுப்பைச் சேர்க்க முயல்கிறது.

இந்த மசோதா சட்டமாக நிறைவேற்றப்பட்டால், வெறுப்பு குற்றங்கள் மற்றும் பாகுபாடுகளுக்கு எதிரான தற்போதைய சட்டங்களை அமல்படுத்தும்போது மாநில மற்றும் உள்ளூர் சட்ட அமலாக்க நிறுவனங்கள் இந்து வெறுப்பைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கட்டளையிடும்.

ஏப்ரல் 2023 ஆம் ஆண்டு, ஜார்ஜியா இந்து வெறுப்பைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றிய போது தொடங்கப்பட்ட பணியின் நீட்டிப்பாகும்.

“கடந்த சில ஆண்டுகளில், நாடு முழுவதும் இந்துக்களுக்கு எதிரான வெறுப்பு, குற்றங்கள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருவதைக் கண்டோம்,” என்று மசோதாவை அறிமுகப்படுத்திய செனட் உறுப்பினர் ஷான் ஸ்டில் கூறியுள்ளார்.

ஜோர்ஜியா மாகாணம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த மசோதாவை, அமெரிக்க மற்றும் இந்தியாவில் உள்ள இந்து அமைப்புகள் வரவேற்றுள்ளன.

Latest news

இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பிபி, தோஷாகானா வழக்கில் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டு தலா 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை...

ஆஸ்திரேலியாவில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய துப்பாக்கி கொள்முதல்

ஆஸ்திரேலியாவில் நடந்த மிக மோசமான பயங்கரவாத தாக்குதல்களில் ஒன்றான Bondi தாக்குதலைத் தொடர்ந்து, துப்பாக்கிச் சட்டங்களை கடுமையாக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. நியூ சவுத் வேல்ஸ் (NSW)...

இளைஞர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ள விக்டோரியன் பிரதமர் 

கடந்த சில நாட்களாக விக்டோரியாவின் Mordialloc கடலோரப் பகுதியில் இளைஞர்கள் குழுவின் கலவர நடத்தை பிரதமர் ஜெசிந்தா ஆலனின் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இருநூறுக்கும் மேற்பட்ட இளைஞர்கள்...

Bondi கடற்கரையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி அனுஷ்டிப்பு

ஞாயிற்றுக்கிழமை நடந்த துயரமான பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நூற்றுக்கணக்கான உயிர்காப்பாளர்கள் போண்டி கடற்கரையில் மூன்று நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர். Bondi and...

Bondi கடற்கரையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி அனுஷ்டிப்பு

ஞாயிற்றுக்கிழமை நடந்த துயரமான பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நூற்றுக்கணக்கான உயிர்காப்பாளர்கள் போண்டி கடற்கரையில் மூன்று நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர். Bondi and...

கிறிஸ்துமஸுக்கு முன்பு எரிபொருள் விலை எப்படி உயரும்?

கிறிஸ்துமஸுக்கு சில நாட்களுக்கு முன்பு, குயின்ஸ்லாந்து முழுவதும் பெட்ரோல் விலை திடீரென அதிகரித்துள்ளது. இந்த பண்டிகை காலத்தில் இந்த அதிகரிப்பு "மிகவும் நியாயமற்றது மற்றும் எதிர்பாராதது" என்று...