ஆஸ்திரேலிய எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் ஒரு பயங்கரவாத சதித்திட்டத்திற்கு இலக்காகியுள்ளதாக செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தனது எதிரியை ஆதரிக்க வந்துள்ளதாக கூறப்படுகிறது.
பிரிஸ்பேர்ணில் ஒரு தாக்குதலுக்குத் தயாராவதற்காக 16 வயது சிறுவன் ஒருவன் குண்டுகள் தயாரிப்பதற்கான பொருட்களை வாங்கியதாக ஆஸ்திரேலிய செய்தி அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
அவரது இலக்கு டட்டன் என்று ஆஸ்திரேலிய செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நேற்று பிற்பகல் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பீட்டர் டட்டனிடம் இது குறித்து கேட்கப்பட்டபோது, தனது முதல் குறிக்கோள் எப்போதும் தனது குடும்பத்தின் பாதுகாப்புதான் என்று கூறினார்.
ஆஸ்திரேலிய காவல்துறை தனக்கு ஒரு சிறந்த பங்களிப்பை வழங்கி வருவதாகவும் அவர் கூறினார்.
டட்டன் 2014 முதல் 2017 வரை குடிவரவு அமைச்சராகப் பணியாற்றினார்.
அந்தக் காலகட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் ஆயிரக்கணக்கான குற்றவாளிகளை நாடு கடத்தப் பாடுபட்டதாகக் கூறப்படுகிறது.