Newsதனியாக துண்டிக்கப்பட்ட தலையை மீண்டும் முதுகெலும்புடன் இணைத்த மருத்துவர்கள்

தனியாக துண்டிக்கப்பட்ட தலையை மீண்டும் முதுகெலும்புடன் இணைத்த மருத்துவர்கள்

-

அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு அவரது தலையையும் முதுகெலும்பையும் இணைக்கும் எலும்பு உடைந்து போனது. இதனால் அவரது உயிரே போகும் ஆபத்து இருந்தது. இருப்பினும், மருத்துவர்கள் தீவிரமாக முயன்று அவரை காப்பாற்றியுள்ளனர். இப்போது சில பிரச்சினைகள் இருந்தாலும் அவர் நலமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

அமெரிக்காவின் இல்லினாஸ் மாகாணத்தைச் சேர்ந்த அமெரிக்கப் பெண் ஒருவருக்கு விளையாடிக் கொண்டு இருக்கும்போது பயங்கரமான காயம் ஏற்பட்டது. தொடர்ந்து நடந்த சில சம்பவங்களால் அவருக்கு உடலின் உட்புறம் தலை துண்டிக்கப்பட்டது. அதாவது அவரது தலையையும் முதுகு எலும்பையும் இணைக்கும் எலும்பு உடைந்து போனது. பொதுவாக இதுபோல நடந்துவிட்டால் அவர்கள் வாழ்க்கை முடிந்துவிடும். ஆனால், மருத்துவர் அவரது தலையை மீண்டும் முதுகெலும்புடன் இணைத்து சாதனை படைத்துள்ளனர்.

மேகன் கிங் என்ற அந்த பெண் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டு இருந்தார். அப்போது சில நண்பர்களுடன் இணைந்து கால்பந்து வீசி விளையாடிக் கொண்டு இருந்தனர். ஒரு சமயம் எகிறிப் பறந்த கால்பந்தை மேகன் கிங் குதித்துப் பிடிக்க முயன்றார். இருப்பினும், நிலைதடுமாறி அந்த பெண் மிக மோசமாக விழுந்ததில் விபத்து ஏற்பட்டது. இதில் அவரது வலது கணுக்கால் சேதமடைந்தது. மேலும், இரண்டு தோள்பட்டை தசைகளும் கிழிந்தது. இந்த விபத்து கடந்த 2005ம் ஆண்டு நடந்துள்ளது.

இதையடுத்து உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அடுத்த அவருக்கு பல்வேறு அறுவை சிகிச்சைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்தது. மூட்டுகள் பலவீனமடைந்து தசைகள் கிழிக்கத் தொடங்கின. ஏன் அவருக்கு இதுபோல ஆகிறது என்றே மருத்துவர்களுக்கு முதலில் புரியவில்லை.

விபத்து நடந்து சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகே மருத்துவர்கள் அவருக்கு ஹைப்பர்மொபைல் எஹ்லர்ஸ்-டான்லோஸ் (hEDS) என்ற நோய் பாதிப்பு இருப்பதைக் கண்டறிந்தனர். இது ஒரு மரபணுக் கோளாறு ஆகும். இந்த கோளாறு காரணமாக ஒரு கட்டத்தில் அந்த பெண்ணின் கழுத்து எலும்பு டிஸ்லோகெட் ஆனது. அதாவது மருத்துவர்கள் அவரது கழுத்தில் இருந்து ஒரு மருத்துவ பிரேஸை அகற்ற முயன்றபோது,அவரது மண்டை ஓடு அவரது முதுகெலும்பிலிருந்து பிரிந்துவிட்டது. அதாவது உட்புறம் அவரது மண்டை ஓட்டின் எலும்பு உடலின் மற்ற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டுவிட்டது.

ஆங்கிலத்தில் இதை internal decapitation என்பார்கள். இது மிகவும் ஆபத்தான ஒரு நிலையாகும். இதுபோல நடந்துவிட்டால் மூளை உடலின் மற்ற பாகங்களுடன் தொடர்பு கொள்வது துண்டிக்கப்படும். நிலைமை மோசமானதால் ஒரு கட்டத்தில் மேகனின் நரம்பியல் மருத்துவர் அவரது தலையைக் கையில் பிடித்துக் கொண்டு இருக்க வேண்டி இருந்தது. இல்லை என்றால் நரம்புகளும் ரத்த நானங்களும் அறுந்து விடும் என்ற சூழல் இருந்தது.

இதையடுத்து அவர் அவசரமாக எமர்ஜென்சி அறுவை சிகிச்சை அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு மண்டை ஓட்டை அவளது முதுகெலும்புடன் இணைக்க ஆப்ரேஷன் நடத்தப்பட்டது. சுமார் 37 அறுவை சிகிச்சைகள் நடந்த நிலையில், அதன் பிறகே மேகனின் மண்டை நிரந்தரமாக அவளது முதுகெலும்புடன் இணைக்கப்பட்டது. இப்போது அவரால் தலையை மேலே, கீழே அல்லது பக்கவாட்டில் நகர்த்த முடியாது. உடம்புடன் சேர்ந்தே திருப்ப முடியும்.

இருந்தபோதிலும் பெரும்பாலானோருக்கு இதுபோல பிரச்சினை ஏற்பட்டால் அவர்கள் உயிரிழந்துவிடுவார்கள். ஆனால், மேகன் உயிர் பிழைத்தார். இப்போதும் தனது வேலையைச் செய்து வருகிறார். தனக்கு நேர்ந்த கதையை மற்றவர்களுக்குச் சொல்லி ஊக்கமளித்து வருகிறார்.

Latest news

புதிய கட்டண முறையை அறிமுகப்படுத்தியுள்ள Woolworths

Woolworths நிறுவனம் Scan&Go மொபைல் கட்டண அம்சத்தை நீக்கிவிட்டு புதிய கட்டண முறையை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. தற்போதுள்ள முறையின் கீழ், பொருட்களுக்கான பணம் மொபைல் போன்...

நெடுஞ்சாலையின் நடுவில் டைட்டானிக் காட்சிகள் – $600 அபராதம் 

விக்டோரியாவில் உள்ள ஒரு பிரபலமான சாலையில் தனது காரின் திறந்த sunroof மீது இருந்து டைட்டானிக் காட்சியை நிகழ்த்தியதற்காக ஒரு பெண்ணுக்கு காவல்துறை $600 அபராதம்...

விக்டோரியாவில் ஒரு நெடுஞ்சாலையில் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்ட 12 வாகனங்கள்

விக்டோரியாவின் Gordon-இல் உள்ள மேற்கு நெடுஞ்சாலையில் 12 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரு ஓட்டுநர் பலத்த காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சாலையில் அடர்த்தியான பனிக்கட்டி படிந்திருந்ததால் இந்த...

டிரம்ப் நிர்வாகத்தின் பாதுகாப்பு கோரிக்கையை நிராகரித்த அரசாங்கம்

பாதுகாப்பு செலவினங்களை அதிகரிப்பதற்கான தனது கோரிக்கையை டிரம்ப் நிர்வாகம் நிராகரித்துள்ளதாக ஆஸ்திரேலிய பொருளாளர் Jim Chalmers கூறுகிறார். அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் Pete Hexeth சமீபத்தில் பாதுகாப்பு...

சிட்னி பல்கலைக்கழக முன்னாள் மாணவர் மீது Cyber Hacking குற்றச்சாட்டு

சிட்னி பல்கலைக்கழகத்தில் சைபர் தாக்குதல்களின் அலையைத் தொடங்கியதாக முன்னாள் மாணவர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு, 27 வயதான Birdie Kingston, வளாகத்தில்...

சிட்னியில் குப்பைத் தொட்டிகளை வைத்திருக்க அனுமதி பெற வேண்டுமா?

குப்பைத் தொட்டிகளில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சிட்னி நகர சபை புதிய முறையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் கீழ், நகர்ப்புறங்களில் சாலைகளுக்கு அருகில் வைக்கப்படும் குப்பைத்...