Newsபூமி மீது மோதும் விண்கற்கள் - ஆபத்தை தவிர்க்க நாசா புதிய...

பூமி மீது மோதும் விண்கற்கள் – ஆபத்தை தவிர்க்க நாசா புதிய திட்டம்

-

சூரிய குடும்பத்தில் ஏராளமான விண்கற்கள் இருக்கின்றன. இவற்றில் எது? எப்போது பூமி மீது மோதும் என்பதை கணிக்க முடியாததாக இருக்கிறது. இருப்பினும் இந்த ஆபத்தை தவிர்க்க நாசா புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளது.

இந்த திட்டத்தை எப்படி செயல்படுத்துவது என்பது குறித்து நாசா ஒரு ஆவணப்படத்தை வெளியிட்டிருக்கிறது.

அவ் ஆவணப்படத்தில் விண்கற்கள் மோதலை எதிர்கொள்ள 3 நடவடிக்கைகளை பின்பற்றுவதாக குறிப்பிட்டிருக்கிறது. இதன் மூலம் விண்கல் மோதலிலிருந்து பூமியை பாதுகாக்கலாம் என்றும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறது.

முதலில் எந்த விண்கல் பூமியை நோக்கி வருகிறது என்பதை கண்டுபிடிக்க வேண்டும். அந்த விண்கலின் அளவு என்ன? எங்கிருந்து வருகிறது? எப்போது பூமியை மோதும் என்பதை கணக்கீடு செய்ய வேண்டும். மோதலால் பூமியில் எந்த மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்பதையும் கணிக்க வேண்டும். குறிப்பாக விண்கல் எந்த பகுதியை தாக்கும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

அதன் பின்னர் விண்கல்லின் இயக்கத்தை கண்காணிக்க வேண்டும். கல் எந்த வேகத்தில் நகர்ந்து வருகிறது. அதன் பாதையில் மாற்றம் ஏற்படுமா? கல்லின் தன்மை என்ன? பூமிக்கும் கல்லுக்கும் இடையேயான தூரம் எவ்வளவு குறைந்து வருகிறது? பூமியின் ஈர்ப்பு விசை எப்படி இந்த கல்லை பாதிக்கும்? என்பதை பற்றி அறிந்திருக்க வேண்டும்.

கடைசியாக எல்லாம் உறுதியாகிவிட்டது. விண்கல் நிச்சயம் பூமியை தாக்கும் என்பதை உறுதி செய்த பிறகு, தேவையெனில் அந்த விண்கல்லின் பாதையை மாற்ற வேண்டும். இதற்காக நாசா DRAT என்கிற மிஷனை முயன்று பார்த்திருக்கிறது. இந்த மிஷன்படி, விண்கல்லில் ஒரு விண்கல்லை இறக்கி, அந்த விண்கல்லின் தன்மை பற்றி ஆய்வு செய்திருக்கிறது. இருப்பினும் இந்த மிஷன் மூலம் விண்கல்லின் பாதையை மாற்ற முடியுமா? என்பது உறுதி செய்யப்படவில்லை..

இதேவேளை விண்கற்களில் எது எப்போது பூமியை மோதும் என்பதை ஓரளவுதான் கணிக்க முடியும். இருப்பினும் இந்த பணியை நாசா சிறப்பாக செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

45 பலஸ்தீனர்களின் உடல்கள் ஒப்படைத்த இஸ்ரேல்

ஹமாஸிடமிருந்து 3 இஸ்ரேலிய பணயக்கைதிகள் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பலஸ்தீனர்களின் உடல்களை நேற்று (3ம் திகதி) ஒப்படைத்திருப்பதாக காஸாவிலுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹமாஸிடமிருந்து ஒப்படைக்கப்பட்ட...

முன்கூட்டியே ஓய்வு பெற சில எளிய குறிப்புகள்

சில ஆஸ்திரேலியர்களுக்கு முன்கூட்டியே ஓய்வு பெறுவது வெறும் கனவாக மாறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாழ்க்கைச் செலவு அழுத்தங்கள் காரணமாக மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் ஓய்வூதியத்...

விக்டோரியாவின் நீர் கட்டணங்கள் இரட்டை இலக்க சதவீதத்தால் உயர்வு

விக்டோரியாவின் Greater மெட்ரோபொலிட்டன் பகுதியில் வசிப்பவர்கள் 2028 ஆம் ஆண்டு தொடங்கி ஆண்டுதோறும் 10% க்கும் அதிகமான நீர் கட்டண உயர்வை எதிர்கொள்ள நேரிடும் என்று...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் கவனத்தை ஈர்க்கும் குழந்தை பராமரிப்புத் துறை

பல ஆண்டுகளாக பொருளாதார சீர்திருத்தங்களின் கீழ் பராமரிக்கப்பட்டு வந்த ஆஸ்திரேலியாவின் குழந்தை பராமரிப்புத் துறை, குற்றச்சாட்டுகள் மற்றும் விமர்சனங்களுக்கு மத்தியில் மீண்டும் சமூக ஆய்வுக்கு உள்ளாகியுள்ளதாக...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் கவனத்தை ஈர்க்கும் குழந்தை பராமரிப்புத் துறை

பல ஆண்டுகளாக பொருளாதார சீர்திருத்தங்களின் கீழ் பராமரிக்கப்பட்டு வந்த ஆஸ்திரேலியாவின் குழந்தை பராமரிப்புத் துறை, குற்றச்சாட்டுகள் மற்றும் விமர்சனங்களுக்கு மத்தியில் மீண்டும் சமூக ஆய்வுக்கு உள்ளாகியுள்ளதாக...

சாலை விதிகளில் ஏற்படும் பெரிய மாற்றங்களுக்கு ஓட்டுநர்கள் தயாரா?

2025 ஆம் ஆண்டில், ஆஸ்திரேலியாவின் சாலைப் பாதுகாப்பு மற்றும் ஓட்டுநர் சட்டங்களில் கடுமையான மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. புதிய தொழில்நுட்ப கண்காணிப்பு அமைப்புகள், ஓட்டுநர் பயிற்சியின் புதிய...