Cinemaஹீரோவாக அறிமுகமாகும் இலங்கையின் ராப் பாடகர் - முக்கிய கதாப்பாத்திரத்தில் ஜனனி

ஹீரோவாக அறிமுகமாகும் இலங்கையின் ராப் பாடகர் – முக்கிய கதாப்பாத்திரத்தில் ஜனனி

-

தமிழ் சினிமாவில் புதுமுகங்களுக்கென்றே எப்பொழுதும் ஒரு விசேஷமான வரவேற்பு உள்ளது. அந்த வகையில், தற்போது இலங்கையைச் சேர்ந்த ராப் பாடகர் ஒருவர், ஹீரோவாக களமிறங்குவதற்கான அதிரடி முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். வாகீசன் எனப்படும் இந்த ராப் பாடகர், வினோத் ராஜேந்திரன் இயக்கத்தில் உருவாகும் ‘மைனர்’ திரைப்படத்தின் மூலம் தமிழில் ஹீரோவாக அறிமுகமாக இருக்கின்றார்.

இப்படத்தில் அவருக்கு ஜோடியாக, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஜனனி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் என்ற செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் பிறந்து வளர்ந்த வாகீசன், தமிழ் ஹிப் ஹாப் மற்றும் ராப் இசை உலகத்தில் தனக்கென ஒரு தனிச்சிறப்பை உருவாக்கியவர். இளைய தலைமுறையின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் பல்வேறு ராப் பாடல்களை உருவாக்கிய அவர், தமிழ் மொழியை இசை வழியாக உலகமே கேட்கச் செய்தவர் எனலாம்.

இந்த படம் இலங்கை தமிழர்களுக்கும், தமிழ்நாட்டு ரசிகர்களுக்கும் இடையே ஒரு மிகப் பெரிய கலாசாரத் தொடர்பை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அந்தவகையில் ‘மைனர்’ திரைப்படம் முழுமையாக முடிந்தவுடன் அதன் முதல் லுக், டீசர், பாடல்கள் என அனைத்தும் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. இந்தக் கூட்டணியின் வெற்றிக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Latest news

ஆஸ்திரேலியாவிலிருந்து டிமென்ஷியாவுக்கு புதிய மருந்து

டிமென்ஷியா அறிகுறிகளைப் போக்க ஆஸ்திரேலியாவில் உருவாக்கப்பட்ட ஒரு மருந்து, நாடு முழுவதும் பல மாநிலங்களில் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. டிமென்ஷியா உள்ளவர்களுக்கு நடத்தை மற்றும் உளவியல் மாற்றங்களுக்கு வழிவகுக்கும்....

வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளார் Elon Musk

உலகின் மிகப் பெரிய பணக்காரரான Elon Musk, தனது வெள்ளை மாளிகைப் பணிகளில் இருந்து விலகுவதாக உறுதிப்படுத்தியுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் இரண்டாவது நிர்வாகத்தின் தொடக்கத்திலிருந்து...

NSW வெள்ளத்திற்குப் பிறகு வாழத் தகுதியற்றதாக மாறிய 1100க்கும் மேற்பட்ட கட்டிடங்கள்

நியூ சவுத் வேல்ஸின் மத்திய வடக்கு கடற்கரையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்புப் பணிகள் தொடர்வதால், 1100க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் வாழத் தகுதியற்றதாகக் கருதப்பட்டுள்ளன. பல்லாயிரக்கணக்கான வீடுகளில்...

தன் குழந்தைகளுக்காக குப்பைகளில் உணவு தேடும் பெண் – காஸாவின் பரிதாபம்

காஸாவில் பெண் ஒருவர் தன்னுடைய 5 குழந்தைகளுக்காக குப்பையில் உணவைத் தேடி எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். அவர் ஒருவர் மட்டுமல்ல, காஸாவில் பெரும்பாலான மக்கள் பட்டினியில்...

NSW வெள்ளத்திற்குப் பிறகு வாழத் தகுதியற்றதாக மாறிய 1100க்கும் மேற்பட்ட கட்டிடங்கள்

நியூ சவுத் வேல்ஸின் மத்திய வடக்கு கடற்கரையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்புப் பணிகள் தொடர்வதால், 1100க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் வாழத் தகுதியற்றதாகக் கருதப்பட்டுள்ளன. பல்லாயிரக்கணக்கான வீடுகளில்...

சிட்னியின் புதிய சுரங்கப்பாதையில் 4 மாதங்களில் பதிவான $6 மில்லியன் அபராதங்கள்

சிட்னியின் Rozelle Interchange-இல் உள்ள புதிய மோட்டார் பாதையின் ஒரு பகுதி, மாநில அரசாங்கத்திற்கு ஒரு இலாபகரமான வருமான ஆதாரமாக மாறியுள்ளது. இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மட்டும்,...