Newsகடன் பெற்று Crypto-வில் முதலீடு செய்ய தடை விதித்த பிரபல நாடு

கடன் பெற்று Crypto-வில் முதலீடு செய்ய தடை விதித்த பிரபல நாடு

-

பிரித்தானிய அரசு, பொதுமக்கள் கடனில் பெற்ற பணத்தை பயன்படுத்தி கிரிப்டோகரன்சிகளை வாங்கும் செயலுக்கு தடை விதிக்க திட்டமிட்டுள்ளது.

இதன் மூலம், வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணய சந்தையை கட்டுப்படுத்தப்பட உள்ளது.

Financial Conduct Authority (FCA) எனும் நாட்டு நிதி மேற்பார்வை அமைப்பு, கிரிப்டோ முதலீடுகளை கட்டுப்படுத்த புதிய விதிகளை உருவாக்கி வருகிறது.

கடந்த 2022-ல் கிரிப்டோ வாங்க கடன் பயன்படுத்தியவர்கள் 6 சதவீதம் இருந்ததென யூகோவ் சர்வே தெரிவிக்க, 2023-ல் இது 14 சதவீதமாக உயர்ந்துள்ளது.

கடனில் வாங்கப்படும் முதலீடுகள் நஷ்டமடையும் போது, பொதுமக்கள் தங்கள் சொத்துகளை இழக்கும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்று மோசமான நிதி நடத்தைகள் சூதாட்டத்தை ஒத்ததாகும் என நாடாளுமன்ற குழு கண்டறிந்துள்ளது.

இந்நிலையில், ரிடெயில் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு மற்றும் சந்தை நம்பிக்கையை உறுதி செய்ய, சட்ட நடவடிக்கைகள் மூலம் FCA இப்போது அனைத்து கிரிப்டோ நிறுவனங்களையும் மேற்பார்வைக்கு கொண்டு வரவுள்ளது.

முக்கியமாக, கிரிப்டோ டிரேடிங் தளங்கள், இடைத்தரகர்கள் மற்றும் கிரிப்டோ கடன் நிறுவனங்களும் இதில் அடங்கும்.

பிரித்தானிய நிதியமைச்சர் ரேசல் ரீவ்ஸ் மற்றும் FCA தலைவர் நிகில் ராதி, சில தளங்களில் ஒழுங்குமுறை சலுகை அளிக்க வேண்டும் என்றும், அதே நேரத்தில் சந்தை நம்பிக்கையையும் வலுப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்த முயற்சி, நாட்டு வளர்ச்சிக்கும், நிதி நிலைத்தன்மைக்கும் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest news

எடை இழப்பு மருந்துகள் பயன்படுத்தும் 40 பெண்கள் கர்ப்பமானது எப்படி?

எடை இழப்பு மருந்துகளை எடுத்துக்கொள்ளும் பெண்களுக்கு பிரிட்டிஷ் மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் நிறுவனம் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. எடை இழப்பு மருந்துகளை உட்கொள்ளும் போது 40...

வீட்டுவசதி பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பது என கூறும் ஆஸ்திரேலிய வீட்டுவசதி அமைச்சர்

வீட்டுவசதிப் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால், ஆஸ்திரேலியர்களின் ஒரு தலைமுறை தொழிலாளர் கட்சிக்கு எதிராகத் திரும்பும் என்று வீட்டுவசதி அமைச்சர் Clare O'Neil கூறுகிறார். ABC-க்கு அளித்த பேட்டியில், வீட்டுவசதி...

விக்டோரியாவில் ஆரம்பமானது Ski சீசன்

விக்டோரியாவின் Ski சீசன் இந்த வார இறுதியில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது. விக்டோரியாவின் Alpine பகுதியில் உள்ள விருப்பமான ski lodgesல் ஒன்றில் தங்கி இந்த அனுபவத்தை அனுபவிக்க,...

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் தன்னார்வல வாகனங்கள்

தெற்கு ஆஸ்திரேலியாவிற்கு நூற்றுக்கணக்கான வைக்கோல் மூட்டைகள் லாரிகளில் கொண்டு செல்லப்பட்டு, மாநிலத்தின் வடக்கு-மத்திய பகுதியில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இதுவரை இல்லாத...

நாய் தாக்குதல்களைத் தடுக்க ஆஸ்திரேலிய அஞ்சல் ஊழியர்களுக்கு கிடைத்துள்ள புதிய சாதனம்

ஆஸ்திரேலியாவில் தபால் ஊழியர்களின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதால், பணியில் இருக்கும்போது நாய் தாக்குதல்களிலிருந்து அவர்களைப் பாதுகாக்க புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, தபால் ஊழியர்களின் பாதுகாப்பிற்காக citronella மற்றும்...

கருப்பை புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதற்கான ஒரு முறையை உருவாக்கிய மெல்பேர்ண் ஆய்வகம்

கருப்பை புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் உலகின் முதல் இரத்தப் பரிசோதனை மெல்பேர்ணில் உள்ள ஒரு ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் American Society of Clinical...