Breaking Newsஆஸ்திரேலியாவில் இறக்குமதி செய்யப்பட்ட போலி மருந்துகளில் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவில் இறக்குமதி செய்யப்பட்ட போலி மருந்துகளில் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை

-

ஆஸ்திரேலியாவில் ஆபத்தான போலி வலி நிவாரண மருந்து குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த மருந்தில் synthetic opioid இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

“Oxycodone மாத்திரைகளைப் போலவே தோற்றமளிக்கும் போலி மருந்துகளில் இது கண்டறியப்பட்டது” என்று ஆஸ்திரேலிய கூட்டாட்சி காவல்துறை (AFP) தெரிவித்துள்ளது.

Oxycodone மாத்திரைகள் ஒரு மருத்துவ நிபுணரின் பரிந்துரைச் சீட்டுடன் மட்டுமே சட்டப்பூர்வமாகக் கிடைக்கும்.

ஆனால் ஏப்ரல் 2024 மற்றும் பெப்ரவரி 2025 இல் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட மருந்துகள் Nitazenes அடங்கிய போலி மருந்துகாள் என கண்டறியப்பட்டது.

“Nitazenes ஒரு சட்டவிரோதமான மற்றும் ஆபத்தான synthetic opioid ஆகும். இது கடுமையான மற்றும் கணிக்க முடியாத உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும்” என்று AFP தெரிவித்துள்ளது.

Nitazenes-ஐ அதிகமாக உட்கொண்டால், சுயநினைவு இழப்பு, மேலோட்டமான அல்லது சுவாசம் நின்று போதல், நீல-ஊதா நிற தோல் மற்றும் மெதுவான அல்லது ஒழுங்கற்ற நாடித்துடிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

Nitazenes, fentanyl-ஐ விட 10 மடங்கு அதிக சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மேலும் அவை தூள், மாத்திரைகள், நாசி ஸ்ப்ரேக்கள் மற்றும் vape திரவங்கள் வடிவில் காணப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

மருத்துவ ஆலோசனையின் பேரில் கஞ்சா பயன்படுத்தும் ஓட்டுநர்களுக்கு அபராத விலக்கு அளிக்கப்படுமா?

மருத்துவ ஆலோசனையின் பேரில் கஞ்சாவைப் பயன்படுத்தும் ஓட்டுநர்கள் தங்கள் ஓட்டுநர் உரிமங்களை இழப்பதிலிருந்தும் அபராதங்களை எதிர்கொள்வதிலிருந்தும் பாதுகாக்க நியூ சவுத் வேல்ஸ் அரசாங்கம் ஒரு மசோதாவை...

ஒரு இடம் பின்தங்கியுள்ள உலக தரவரிசையில் ஆஸ்திரேலிய விமான நிறுவனங்கள்

ஆஸ்திரேலிய விமான நிறுவனங்களால் நடத்தப்படும் அடிக்கடி பறக்கும் விமானத் திட்டங்கள் உலக தரவரிசையில் குறைந்த மதிப்பெண்களைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் விமான விசுவாசத் திட்டங்களில்...

விமானி கடத்தல் சம்பவத்தில் இரு ஆஸ்திரேலியர்கள் மீது குற்றம்

நியூசிலாந்து விமானி கடத்தப்பட்ட வழக்கில் துப்பாக்கிகளை கொண்டு சென்றதாக இரண்டு ஆஸ்திரேலியர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. விமானியைக் கடத்தியதற்குப் பொறுப்பான இந்தோனேசியாவில் உள்ள ஒரு வன்முறை துணை...

அதிக வெப்பமான Cabin-இல் 2 மணி நேரம் சிக்கிக் கொண்ட பயணிகள்

Air India விமானத்தில் குளிரூட்டும் முறைமையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பயணிகள் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மிகவும் சூடான கேபினிலேயே இருக்க வேண்டிய கட்டாயம்...

ரஷ்யாவின் எண்ணெயை வாங்க வேண்டாம் என்று நேட்டோ நாடுகளுக்கு டிரம்ப் அழுத்தம்

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதைத் தவிர்க்குமாறு நேட்டோ நாடுகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்துகிறார். ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதற்கு சீனா 50 முதல் 100 சதவீதம் வரை...

விமானி கடத்தல் சம்பவத்தில் இரு ஆஸ்திரேலியர்கள் மீது குற்றம்

நியூசிலாந்து விமானி கடத்தப்பட்ட வழக்கில் துப்பாக்கிகளை கொண்டு சென்றதாக இரண்டு ஆஸ்திரேலியர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. விமானியைக் கடத்தியதற்குப் பொறுப்பான இந்தோனேசியாவில் உள்ள ஒரு வன்முறை துணை...