Breaking Newsஆஸ்திரேலியாவில் இறக்குமதி செய்யப்பட்ட போலி மருந்துகளில் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவில் இறக்குமதி செய்யப்பட்ட போலி மருந்துகளில் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை

-

ஆஸ்திரேலியாவில் ஆபத்தான போலி வலி நிவாரண மருந்து குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த மருந்தில் synthetic opioid இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

“Oxycodone மாத்திரைகளைப் போலவே தோற்றமளிக்கும் போலி மருந்துகளில் இது கண்டறியப்பட்டது” என்று ஆஸ்திரேலிய கூட்டாட்சி காவல்துறை (AFP) தெரிவித்துள்ளது.

Oxycodone மாத்திரைகள் ஒரு மருத்துவ நிபுணரின் பரிந்துரைச் சீட்டுடன் மட்டுமே சட்டப்பூர்வமாகக் கிடைக்கும்.

ஆனால் ஏப்ரல் 2024 மற்றும் பெப்ரவரி 2025 இல் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட மருந்துகள் Nitazenes அடங்கிய போலி மருந்துகாள் என கண்டறியப்பட்டது.

“Nitazenes ஒரு சட்டவிரோதமான மற்றும் ஆபத்தான synthetic opioid ஆகும். இது கடுமையான மற்றும் கணிக்க முடியாத உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும்” என்று AFP தெரிவித்துள்ளது.

Nitazenes-ஐ அதிகமாக உட்கொண்டால், சுயநினைவு இழப்பு, மேலோட்டமான அல்லது சுவாசம் நின்று போதல், நீல-ஊதா நிற தோல் மற்றும் மெதுவான அல்லது ஒழுங்கற்ற நாடித்துடிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

Nitazenes, fentanyl-ஐ விட 10 மடங்கு அதிக சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மேலும் அவை தூள், மாத்திரைகள், நாசி ஸ்ப்ரேக்கள் மற்றும் vape திரவங்கள் வடிவில் காணப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

71 வயதில் காலமானார் குயின்ஸ்லாந்து முன்னாள் அமைச்சர்!

குயின்ஸ்லாந்து மாநிலத்தின் முன்னாள் தொழிலாளர் அமைச்சர் Gordon Nuttall, புற்றுநோயுடன் போராடி தனது 71 வயதில் காலமானார். Beattie அரசாங்கத்தில் ஒரு மூத்த நபராக Nuttall இருந்தார்....

பாலியல் பொம்மையுடன் MRI ஸ்கேன் செய்யப்பட்ட பெண் ஆபத்தான நிலையில்

ஒரு பெண்ணின் ஆசனவாயில் Sex Toy செருகப்பட்டதால், MRI ஸ்கேன் எடுக்கும்போது அவருக்கு உட்புறத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பொதுவாக, நோயாளிகள் MRI ஸ்கேன் எடுக்கும்போது அவர்கள்...

மேற்கு ஆஸ்திரேலிய மக்கள் தடுப்பூசி பெறுவது கட்டாயம் – சுகாதார அதிகாரிகள்

மேற்கு ஆஸ்திரேலியாவில் காய்ச்சல் தடுப்பூசி போடுவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது . தேசிய நோய்த்தடுப்பு ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு மையத்தின் தரவுகளின்படி, மேற்கு ஆஸ்திரேலியாவில் 65 வயதுக்குட்பட்டவர்களில் காய்ச்சல்...

நிலையான வட்டி விகிதங்களைக் குறைக்கும் ANZ வங்கி

ரிசர்வ் வங்கியின் அடுத்த பணவியல் கொள்கை நடவடிக்கைக்கு இன்னும் 11 நாட்கள் மீதமுள்ள நிலையில், நிலையான வட்டி விகிதங்களைக் குறைக்க ANZ வங்கிக்கு ரிசர்வ் வங்கி...

மெல்பேர்ணில் பாதசாரி கடவையில் குழந்தையை மோதிய தப்பியோடிய சந்தேக நபர்

மெல்பேர்ணின் Murrumbeena ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள பாதசாரி கடவையில் ஒரு குழந்தையை மோதி விபத்துக்குள்ளாக்கிய ஓட்டுநரைக் கண்டுபிடிக்க காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது. மே 1 ஆம்...

மேற்கு ஆஸ்திரேலிய மக்கள் தடுப்பூசி பெறுவது கட்டாயம் – சுகாதார அதிகாரிகள்

மேற்கு ஆஸ்திரேலியாவில் காய்ச்சல் தடுப்பூசி போடுவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது . தேசிய நோய்த்தடுப்பு ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு மையத்தின் தரவுகளின்படி, மேற்கு ஆஸ்திரேலியாவில் 65 வயதுக்குட்பட்டவர்களில் காய்ச்சல்...