Breaking Newsஆஸ்திரேலியாவில் இறக்குமதி செய்யப்பட்ட போலி மருந்துகளில் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவில் இறக்குமதி செய்யப்பட்ட போலி மருந்துகளில் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை

-

ஆஸ்திரேலியாவில் ஆபத்தான போலி வலி நிவாரண மருந்து குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த மருந்தில் synthetic opioid இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

“Oxycodone மாத்திரைகளைப் போலவே தோற்றமளிக்கும் போலி மருந்துகளில் இது கண்டறியப்பட்டது” என்று ஆஸ்திரேலிய கூட்டாட்சி காவல்துறை (AFP) தெரிவித்துள்ளது.

Oxycodone மாத்திரைகள் ஒரு மருத்துவ நிபுணரின் பரிந்துரைச் சீட்டுடன் மட்டுமே சட்டப்பூர்வமாகக் கிடைக்கும்.

ஆனால் ஏப்ரல் 2024 மற்றும் பெப்ரவரி 2025 இல் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட மருந்துகள் Nitazenes அடங்கிய போலி மருந்துகாள் என கண்டறியப்பட்டது.

“Nitazenes ஒரு சட்டவிரோதமான மற்றும் ஆபத்தான synthetic opioid ஆகும். இது கடுமையான மற்றும் கணிக்க முடியாத உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும்” என்று AFP தெரிவித்துள்ளது.

Nitazenes-ஐ அதிகமாக உட்கொண்டால், சுயநினைவு இழப்பு, மேலோட்டமான அல்லது சுவாசம் நின்று போதல், நீல-ஊதா நிற தோல் மற்றும் மெதுவான அல்லது ஒழுங்கற்ற நாடித்துடிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

Nitazenes, fentanyl-ஐ விட 10 மடங்கு அதிக சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மேலும் அவை தூள், மாத்திரைகள், நாசி ஸ்ப்ரேக்கள் மற்றும் vape திரவங்கள் வடிவில் காணப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

யுனெஸ்கோவின் கலாசார பாரம்பரிய பட்டியலில் இணைக்கப்பட்ட பண்டிகை

யுனெஸ்கோவின் கலாசார பாரம்பரிய பட்டியலில் இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளிப் பண்டிகை நேற்று (10) உத்தியோகபூர்வமாக இணைக்கப்பட்டுள்ளது. டெல்லி செங்கோட்டையில் நடைபெற்று வரும் யுனெஸ்கோவின் கலாசார பாரம்பரியக்...

பூமியை விரைவாக நெருங்கும் வால் நட்சத்திரத்தின் சமீபத்திய படங்கள்

விரைவில் பூமியை நெருங்கவிருக்கும் ஒரு interstellar வால் நட்சத்திரத்தின் புதிய புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவை ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி மற்றும் Jupiter Icy Moons Explorer ஆகியவற்றால்...

குழந்தைகளில் பல் சிதைவின் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறிய ஒரு புதிய வழி

இளம் குழந்தைகளில் பல் சிதைவின் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறிவதில் பல் மருத்துவத்திற்கு சவால் விடும் வகையில் AI தொழில்நுட்பம் செயல்பட்டு வருகிறது. மின்சார பல் துலக்குதலைப் போல...

Westpac சேவை நிறுத்தம் – ஆயிரக்கணக்கானோருக்கு சேவை சிக்கல்கள்

ஆஸ்திரேலியாவின் முக்கிய வங்கிகளில் ஒன்றானWestpac-ல் ஏற்பட்ட செயலிழப்பு காரணமாக வாடிக்கையாளர்கள் ஆன்லைன் வங்கி மற்றும் EFTPOS ஐ அணுக முடியவில்லை. பிரச்சனை என்ன என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க இலங்கை சென்ற ஆஸ்திரேலிய அமைச்சர்

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு ஆதரவைத் தெரிவிக்க ஆஸ்திரேலியாவின் சர்வதேச கல்வி மற்றும் குடியுரிமை, சுங்கம் மற்றும் பன்முக கலாச்சார விவகாரங்களுக்கான உதவி அமைச்சர் ஜூலியன்...

ஆஸ்திரேலிய மாநிலத்தில் கண்டறியப்பட்டுள்ள இரண்டாவது வைரஸ் தொற்று

டாஸ்மேனியாவில் மேலும் ஒருவருக்கு தட்டம்மை நோய் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். கடந்த மாதம், பிரிஸ்பேர்ணில் இருந்து ஹோபார்ட்டுக்கு வந்த ஒரு இளைஞன் தட்டம்மை நோயால் பாதிக்கப்பட்டு...