Newsஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என அச்சம்

ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என அச்சம்

-

அமெரிக்காவில் மருந்துகளின் விலையை குறைக்கும் நோக்கில் ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாக உத்தரவில் கையெழுத்திடுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

திங்கட்கிழமை (உள்ளூர் நேரப்படி) காலை 9 மணிக்கு வெள்ளை மாளிகையில் இருந்து நிர்வாக உத்தரவில் கையெழுத்திடுவேன் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதனால் அமெரிக்காவில் மருந்து விலைகள் 30 முதல் 80 சதவீதம் வரை கிட்டத்தட்ட உடனடியாக குறையும் என்று கூறப்படுகிறது.

ஜனாதிபதி ட்ரம்ப் தனது சமூக ஊடகப்பக்கத்தில் குறிப்பிடுகையில், தமது முடிவால் உலகமெங்கும் மருந்துகளின் விலை உயரக் கூடும் என்றும், இதனால் மருந்துகளின் விலை அனைத்து நாடுகளிலும் சமநிலையை எட்டும் என்றும் அவர் பதிவு செய்துள்ளார்.

மருந்து தொடர்பான ட்ரம்பின் நிர்வாக உத்தரவை, அமெரிக்க வரலாற்றில் மிகவும் விளைவு நிறைந்த நிர்வாக உத்தரவுகளில் ஒன்று என அவரது ஆதரவாளர்கள் ஏற்கனவே கொண்டாடி வருகின்றனர்.

ஆனால் ட்ரம்பின் இந்த முடிவை ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலக நாடுகள் கவலையுடனே எதிர்கொள்ள உள்ளனர். மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்களை விட அமெரிக்க மக்கள் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளுக்கு மூன்று முதல் நான்கு மடங்கு அதிகமாக பணம் செலுத்துகிறார்கள்.

இதனாலையே, ட்ரம்பின் இந்த நிர்வாக உத்தரவை அவரது ஆதரவாளர்கள் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள். ஆஸ்திரேலிய மக்கள் தற்போது மருந்து சலுகைகள் திட்டத்தை அனுபவிக்கின்றனர்,

இது சில்லறை விற்பனையாளர்கள் மானிய விலையில் மருந்துகளுக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்துவதால் மொத்த விற்பனை விலை குறைகிறது. இதனால் நோயாளிகள் மற்றும் வயதானவர்கள் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை மலிவாக வாங்க முடியும்.

2023-2024 நிதியாண்டில் மருந்துகளுக்கு மானியம் வழங்குவதற்காக ஆஸ்திரேலிய அரசாங்கம் 17.7 பில்லியன் டொலர் தொகையை செலவிட்டுள்ளது. மேலும், ட்ரம்பின் முடிவால் அதிகரிக்கும் மருந்து விலைகளை கட்டுப்படுத்த அரசாங்கம் அதிக தொகையை செலவிட வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

உயிர் காக்கும் மருந்துகளுக்கு மக்கள் இனி அதிகம் செலவிட வேண்டியிருக்கும். அதிக தொகை செலவிடாத நாடுகள் தனித்துவிடப்படுவார்கள் என்றும் நிபுணர்களால் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

Latest news

பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரோனின் மெழுகு சிலை திருட்டு

பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரோனின் மெழுகு சிலையை போராட்டக்காரர்கள் திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனிடையே, ரஷ்யாவுடன்...

மூன்று பெண்களின் AI படங்களை பதிவேற்றுவதாக மிரட்டியதற்காக ஆடவர் மீது பாலியல் குற்றச்சாட்டு

மூன்று பெண்களைப் பாலியல் ரீதியாகப் பயன்படுத்தி, AI-யால் கையாளப்பட்ட படங்களை ஆன்லைனில் வெளியிடுவதாக மிரட்டியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் முதல் முறையாக நீதிமன்றத்தில் ஆஜரானார். Benjamin Michael...

மும்பை விமான நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட விஷப் பாம்புகள் அடங்கிய பை

 நாட்டிற்குள் விஷப் பாம்புகள் மற்றும் பிற ஊர்வனவற்றை பையில் மறைத்து நாட்டிற்குள் கடத்த முயன்ற ஒருவரை இந்திய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். தாய்லாந்து பயணத்திலிருந்து திரும்பிய...

வீட்டுக் கடன் முறைகேடுக்காக RAMS கடன் நிறுவனம் மீது வழக்கு

வீட்டுக் கடன்களைச் செயலாக்குவதில் முறைகேடு நடந்ததாகக் கூறி, RAMS வீட்டுக் கடன் நிறுவனம் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அது ஆஸ்திரேலிய பத்திரங்கள் மற்றும் முதலீட்டு ஆணையத்திடமிருந்து (ASIC)...

வீட்டுக் கடன் முறைகேடுக்காக RAMS கடன் நிறுவனம் மீது வழக்கு

வீட்டுக் கடன்களைச் செயலாக்குவதில் முறைகேடு நடந்ததாகக் கூறி, RAMS வீட்டுக் கடன் நிறுவனம் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அது ஆஸ்திரேலிய பத்திரங்கள் மற்றும் முதலீட்டு ஆணையத்திடமிருந்து (ASIC)...

அடுத்த வாரம் முதல் ஆஸ்திரேலியாவின் பல மாநிலங்களில் பனிப்பொழிவு ஆரம்பம்

தென்கிழக்கு ஆஸ்திரேலியா முழுவதும் வீசும் குளிர் காற்று காரணமாக, வரும் வாரத்தில் ஆஸ்திரேலிய ஆல்ப்ஸ் மலைகளில் தினசரி பனிப்பொழிவு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நியூ சவுத்...