Newsஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என அச்சம்

ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என அச்சம்

-

அமெரிக்காவில் மருந்துகளின் விலையை குறைக்கும் நோக்கில் ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாக உத்தரவில் கையெழுத்திடுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

திங்கட்கிழமை (உள்ளூர் நேரப்படி) காலை 9 மணிக்கு வெள்ளை மாளிகையில் இருந்து நிர்வாக உத்தரவில் கையெழுத்திடுவேன் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதனால் அமெரிக்காவில் மருந்து விலைகள் 30 முதல் 80 சதவீதம் வரை கிட்டத்தட்ட உடனடியாக குறையும் என்று கூறப்படுகிறது.

ஜனாதிபதி ட்ரம்ப் தனது சமூக ஊடகப்பக்கத்தில் குறிப்பிடுகையில், தமது முடிவால் உலகமெங்கும் மருந்துகளின் விலை உயரக் கூடும் என்றும், இதனால் மருந்துகளின் விலை அனைத்து நாடுகளிலும் சமநிலையை எட்டும் என்றும் அவர் பதிவு செய்துள்ளார்.

மருந்து தொடர்பான ட்ரம்பின் நிர்வாக உத்தரவை, அமெரிக்க வரலாற்றில் மிகவும் விளைவு நிறைந்த நிர்வாக உத்தரவுகளில் ஒன்று என அவரது ஆதரவாளர்கள் ஏற்கனவே கொண்டாடி வருகின்றனர்.

ஆனால் ட்ரம்பின் இந்த முடிவை ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலக நாடுகள் கவலையுடனே எதிர்கொள்ள உள்ளனர். மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்களை விட அமெரிக்க மக்கள் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளுக்கு மூன்று முதல் நான்கு மடங்கு அதிகமாக பணம் செலுத்துகிறார்கள்.

இதனாலையே, ட்ரம்பின் இந்த நிர்வாக உத்தரவை அவரது ஆதரவாளர்கள் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள். ஆஸ்திரேலிய மக்கள் தற்போது மருந்து சலுகைகள் திட்டத்தை அனுபவிக்கின்றனர்,

இது சில்லறை விற்பனையாளர்கள் மானிய விலையில் மருந்துகளுக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்துவதால் மொத்த விற்பனை விலை குறைகிறது. இதனால் நோயாளிகள் மற்றும் வயதானவர்கள் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை மலிவாக வாங்க முடியும்.

2023-2024 நிதியாண்டில் மருந்துகளுக்கு மானியம் வழங்குவதற்காக ஆஸ்திரேலிய அரசாங்கம் 17.7 பில்லியன் டொலர் தொகையை செலவிட்டுள்ளது. மேலும், ட்ரம்பின் முடிவால் அதிகரிக்கும் மருந்து விலைகளை கட்டுப்படுத்த அரசாங்கம் அதிக தொகையை செலவிட வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

உயிர் காக்கும் மருந்துகளுக்கு மக்கள் இனி அதிகம் செலவிட வேண்டியிருக்கும். அதிக தொகை செலவிடாத நாடுகள் தனித்துவிடப்படுவார்கள் என்றும் நிபுணர்களால் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

Latest news

வேலை இழக்கும் நூற்றுக்கணக்கான AGL Energy ஊழியர்கள்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய எரிசக்தி நிறுவனங்களில் ஒன்றான AGL Energy, அதன் நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களை மூடிவிட்டு, நவீனமயமாக்கி, எரிசக்தி திட்டங்களுக்கு மாறத் தயாராகி வருகிறது. இதன்...

NSW ரயில்களில் மின்-சைக்கிள்களை எடுத்துச் செல்ல அபராதம்

நியூ சவுத் வேல்ஸ் ரயில் வலையமைப்பில் (சிட்னி ரயில்கள், NSW ரயில் இணைப்பு, மெட்ரோ) மாற்றப்பட்ட மின்-பைக்குகளின் பயன்பாடு இன்று முதல் முற்றிலும் தடைசெய்யப்படும் . இந்தச்...

பெண்களின் சம்பளம் பற்றி வெளியான புதிய அறிக்கை

பெண்களின் ஊதிய இடைவெளி அவர்களின் வயதைப் பொறுத்து மாறுபடும் என்று சமீபத்திய அறிக்கை ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. Workplace Gender Equality Agency (WGEA) வெளியிட்டுள்ள அறிக்கை, 15...

ஆஸ்திரேலியர்களுக்கு விஷயங்களை எளிதாக்கும் ஒரு புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்

ஆஸ்திரேலியாவின் சுகாதார அமைப்பில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வரும் Medicare-இற்காக $7.9 பில்லியன் Bulk Billing சீர்திருத்தம் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், Medicare அட்டை உள்ள...

ஆஸ்திரேலியர்களுக்கு விஷயங்களை எளிதாக்கும் ஒரு புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்

ஆஸ்திரேலியாவின் சுகாதார அமைப்பில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வரும் Medicare-இற்காக $7.9 பில்லியன் Bulk Billing சீர்திருத்தம் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், Medicare அட்டை உள்ள...

இந்திய நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மோனாஷ் பல்கலைக்கழகம்

RP-Sanjiv Goenka குழுமத்தின் ஒரு பகுதியான மோனாஷ் பல்கலைக்கழகம் மற்றும்  Firstsource Solutions Limited ஆகியவை புதிய செயற்கை நுண்ணறிவு தீர்வுகள் மற்றும் முன்னேற்றங்களை உருவாக்குவதற்கான...