தெற்கு ஆஸ்திரேலியாவின் (SA) கடற்கரையில் பல வாரங்களாகப் பரவி வரும் நச்சுப் பாசிப் பூக்களால் 200க்கும் மேற்பட்ட கடல் விலங்குகள் இதுவரை உயிரிழந்துள்ளன.
மார்ச் மாதத்திலிருந்து, பாசிகளின் எண்ணிக்கை வேகமாக வளர்ந்து, சுமார் 4,500 சதுர கிலோமீட்டர் (3,400 சதுர மைல்கள்) பரப்பளவை எட்டியுள்ளது. இது கிட்டத்தட்ட கங்காரு தீவின் அளவை எட்டியுள்ளது.
மீன்கள் மற்றும் சுறாக்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுத்தும் காரணிகளாகச் செயல்படும் நச்சுப் பொருட்களை இந்தப் பாசிகள் உற்பத்தி செய்வதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
OzFish-இன் SA திட்ட மேலாளர் பிராட் மார்ட்டின் கூறுகையில், பாசிப் பூக்கள் அசாதாரணமானது அல்ல, ஆனால் தற்போதைய நிகழ்வு கடல்வாழ் உயிரினங்களுக்கு பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்துகிறது.
பாசிகளால் உற்பத்தி செய்யப்படும் நச்சுகள், இரத்த சிவப்பணுக்களை சேதப்படுத்துவதன் மூலம் செவுள் மற்றும் திசுக்களுக்கு சேதத்தை ஏற்படுத்தும் என்று பிராட் மார்ட்டின் கூறினார்.
இந்த சூழ்நிலையால் கடல்வாழ் உயிரினங்கள் பெரிய அளவில் இறந்து வருவதாக அவர் கூறினார்.
மேலும் இந்த நிலையால் மீன்பிடி தொழிலும் சிக்கலுக்கு உட்பட்டுள்ளதாகவும் மீன்பிடி தொழிலாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.