தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள Port Noarlunga-வில் சுறா கடித்ததால் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் ஆபத்தான, ஆனால் நிலையான நிலையில் இருப்பதாக அவசர சேவைகளிடம் இருந்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
தண்ணீரில் நீந்திக் கொண்டிருந்த ஒருவரை சுறா கடித்ததாக வந்த தகவலை அடுத்து, காலை 9:45 மணியளவில் Port Noarlunga jetty-இற்கு அவசர சேவைகள் அழைக்கப்பட்டதாக SA காவல்துறை தெரிவித்துள்ளது.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்பு, அவருக்கு முதலுதவிகள் செய்யப்பட்டு, துணை மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டதாக அவர்கள் கூறினர்.
அந்த நபரின் தொடையில் காயம் ஏற்பட்டுள்ளதாக SA ஆம்புலன்ஸ் சேவை தெரிவித்துள்ளது.
ஏனைய நீச்சல் வீரர்கள் தண்ணீரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் அந்தப் பகுதியைத் தவிர்க்குமாறு மக்களை போலீசார் அறிவுறுத்துகின்றனர்.
Port Noarlunga அடிலெய்டிலிருந்து 40 நிமிடங்கள் தெற்கே உள்ளது. மேலும் இது நீச்சல், snorkelling மற்றும் டைவிங்கிற்கு பிரபலமான கடற்கரையாகும்.