Newsஹொங்கொங், சிங்கப்பூரில் வேகமடையும் கொரோனா புதிய அலை

ஹொங்கொங், சிங்கப்பூரில் வேகமடையும் கொரோனா புதிய அலை

-

ஆசிய நாடுகளில் கொரோனா புதிய அலை பரவிவரும் நிலையில் ஹொங்கொங் மற்றும் சிங்கப்பூரில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கடந்த 2019-ல் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகெங்கும் பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. அந்த பாதிப்பு சீரடைய பல ஆண்டுகள் ஆனது. தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு பிறகு அதனை அரசுகள் கட்டுப்படுத்தின.

இந்நிலையில் ஆசிய நாடுகளில் தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. குறிப்பாக மக்கள்தொகை அடர்த்தி கொண்ட ஹொங்கொங் மற்றும் சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது.

ஹொங்கொங்கில் சளி மாதிரிகள் பரிசோதனையில் கொரோனா பொசிட்டிவ் வீதம் சமீபத்தில் ஒரு வருடத்தில் மிக அதிக அளவை எட்டியது. மே முதல் வாரத்தில் இறப்புகள் உட்பட கடும் நோய் பாதிப்பு ஒரு வருடத்தில் அதிகபட்சமாக 31 ஆக உயர்ந்துள்ளது. ஹொங்கொங்கில் கழிவுநீரில் காணப்படும் வைரஸ் அளவு, கொரோனா தொடர்பான மருத்துவ ஆலோசனை, மருத்துவமனையில் சேர்க்கப்படுதல் ஆகியவை இத்தொற்று வேகமாகப் பரவி வருவதை காட்டுகிறது.

இதுபோல் சிங்கப்பூரிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இங்கு மே முதல் வாரத்தில் வைரஸ் பாதிப்பு முந்தைய வாரத்தை விட 28% அதிகரித்து, நோயாளிகள் எண்ணிக்கை 14,200 ஆக உயர்ந்தது. இதுபோல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டோர் எண்ணிக்கை 30% அதிகரித்தது. வைரஸ் பாதிப்பு திடீரென அதிகரித்துள்ளதால் தினசரி பாதிப்பு குறித்து தகவல்களை மக்களிடம் சிங்கப்பூர் அரசு பகிர்ந்து வருகிறது.

கொரோனா வைரஸ் பரவலுக்கு மக்களிடம் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தது உள்ளிட்டவை காரணமாக இருந்தாலும் தற்போதைய வைரஸ் திரிபு மிக வேகமாகப் பரவக்கூடியதாகவோ அல்லது அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகவோ தோன்றவில்லை என அந்நாட்டு சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. சீனாவின் பிரதான நிலப் பரப்பு மற்றும் தாய்லாந்திலும் கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest news

Exmouth கடற்கரையில் அதிகரித்துவரும் ஆபத்தான கடல் உயிரினங்களின் தாக்கம்

Exmouth கடற்கரையில் ஆபத்தான கடல் உயிரினங்களைப் பார்ப்பதும் அவற்றுடன் தொடர்பு கொள்வதும் அதிகரித்து வருவதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். தெற்கு குளிர்காலத்தில் இருந்து தப்பிக்க பார்வையாளர்கள் வடக்கு நோக்கிச்...

விபத்துக்குள்ளான Air India விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிப்பு

Air India விமானத்தின் விமானத் தரவுப் பதிவுக் கருவி அல்லது கருப்புப் பெட்டியை இந்திய புலனாய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். விபத்து நடந்த இடத்திற்கு அருகிலுள்ள ஒரு கூரையில் அது...

சேதமடைந்த வாகனங்களுக்கான பழுதுபார்க்கும் கட்டணங்களை செலுத்தும் விக்டோரியா போக்குவரத்துத் துறை

இந்த வார தொடக்கத்தில் Princes Freeway-இல் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திய ஒரு சம்பவத்தில் சேதமடைந்த வாகனங்களுக்கான பழுதுபார்க்கும் கட்டணங்களை விக்டோரியாவின் போக்குவரத்துத் துறை செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதன்கிழமை...

வறட்சியை எதிர்கொள்ளும் விக்டோரிய விவசாயிகளுக்கு தொல்லை கொடுக்கும் கங்காரு

விக்டோரியாவில் வறட்சி நிலவும் நிலையில், கங்காருக்கள் மேய்ச்சல் நிலங்களில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. கங்காரு கட்டுப்பாட்டு அனுமதி செயல்முறை ஒரு வாரத்திற்கும் குறைவாகக் குறைக்கப்படும் என்று பிரதமர் ஜெசிந்தா...

வறட்சியை எதிர்கொள்ளும் விக்டோரிய விவசாயிகளுக்கு தொல்லை கொடுக்கும் கங்காரு

விக்டோரியாவில் வறட்சி நிலவும் நிலையில், கங்காருக்கள் மேய்ச்சல் நிலங்களில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. கங்காரு கட்டுப்பாட்டு அனுமதி செயல்முறை ஒரு வாரத்திற்கும் குறைவாகக் குறைக்கப்படும் என்று பிரதமர் ஜெசிந்தா...

போதைப்பொருள் கடத்தல் கும்பலில் ஈடுபட்ட பெண்ணுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை

2022 ஆம் ஆண்டில் மேற்கு ஆஸ்திரேலியாவின் தொலைதூர வடக்குப் பகுதிக்கு 132 கிராம் methylamphetamine- கடத்தியதற்காக 47 வயது பெண்ணுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. Merlou...