Sydneyசிட்னி CBD பள்ளியில் ஊழியர்களை மிரட்டிய நபர் கைது

சிட்னி CBD பள்ளியில் ஊழியர்களை மிரட்டிய நபர் கைது

-

இன்று காலை சிட்னி CBD- யில் உள்ள ஒரு பள்ளியில் ஊழியர்களை மிரட்டியதாகக் கூறப்படும் ஒரு நபர் பல மணி நேரங்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டுள்ளார் .

காலை 9.45 மணியளவில் Saint Andrew’s Cathedral பள்ளிக்கு ஒரு நபர் பள்ளியின் ஊழியர்களை அச்சுறுத்தியதாகவும், பின்னர் வளாகத்திற்குத் திரும்பியதாகவும் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

பள்ளி கட்டிடம் பூட்டப்பட்டு சோதனை செய்யப்பட்டது. இருப்பினும் பள்ளி வளாகத்தில் அந்த நபர் காணப்படவில்லை.

பின்னர், Surry Hills-ல் உள்ள ஒரு ஹோட்டலில் 46 வயது நபர் ஒருவர் ஒழுங்கற்ற முறையில் நடந்து கொள்வதாகவும், அந்த இடத்தை விட்டு வெளியேற மறுப்பதாகவும் வந்த தகவலை அடுத்து, போலீசார் அங்கு அழைக்கப்பட்டனர்.

மதியம் 12 மணியளவில் அந்த நபரை போலீசார் கைது செய்தனர். குறித்த நபரே பள்ளியில் நடந்த சம்பவத்துடன் தொடர்பிடையவர் என பொலிஸார் உறுதிப்படுத்தினர்.

அந்த நபர் சர்ரி ஹில்ஸ் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...