Sydneyசிட்னி CBD பள்ளியில் ஊழியர்களை மிரட்டிய நபர் கைது

சிட்னி CBD பள்ளியில் ஊழியர்களை மிரட்டிய நபர் கைது

-

இன்று காலை சிட்னி CBD- யில் உள்ள ஒரு பள்ளியில் ஊழியர்களை மிரட்டியதாகக் கூறப்படும் ஒரு நபர் பல மணி நேரங்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டுள்ளார் .

காலை 9.45 மணியளவில் Saint Andrew’s Cathedral பள்ளிக்கு ஒரு நபர் பள்ளியின் ஊழியர்களை அச்சுறுத்தியதாகவும், பின்னர் வளாகத்திற்குத் திரும்பியதாகவும் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

பள்ளி கட்டிடம் பூட்டப்பட்டு சோதனை செய்யப்பட்டது. இருப்பினும் பள்ளி வளாகத்தில் அந்த நபர் காணப்படவில்லை.

பின்னர், Surry Hills-ல் உள்ள ஒரு ஹோட்டலில் 46 வயது நபர் ஒருவர் ஒழுங்கற்ற முறையில் நடந்து கொள்வதாகவும், அந்த இடத்தை விட்டு வெளியேற மறுப்பதாகவும் வந்த தகவலை அடுத்து, போலீசார் அங்கு அழைக்கப்பட்டனர்.

மதியம் 12 மணியளவில் அந்த நபரை போலீசார் கைது செய்தனர். குறித்த நபரே பள்ளியில் நடந்த சம்பவத்துடன் தொடர்பிடையவர் என பொலிஸார் உறுதிப்படுத்தினர்.

அந்த நபர் சர்ரி ஹில்ஸ் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...