NewsDating செயலிகளால் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துவரும் பாலியல் வன்கொடுமைகள்

Dating செயலிகளால் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துவரும் பாலியல் வன்கொடுமைகள்

-

மெல்பேர்ணில் 17 வயது சிறுமி ஒருவர் Dating app மூலம் அறிமுகமான ஒரு இளைஞரை நேரில் சந்தித்து பாலியர் ரீதியாக பாதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று அண்மையில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் பொலிஸாரிடம் முறைபாடு ஒன்றையும் பதிசெய்துள்ளார்.

இதுகுறித்து விக்டோரியன் தடயவியல் குழந்தை மருத்துவ சேவையின் துணை இயக்குநரான தடயவியல் மருத்துவர் ஜோனா டல்லியிடம் கேட்டபோது, “கடந்த பத்தாண்டுகளில் பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் போக்கையே கொண்டுள்ளது” என்றார்.

சமூக ஊடக செயலிகளைப் பயன்படுத்தும் தனிப்பட்ட பயனர்களும், குழந்தைகளின் பெற்றோரும் அதிக விழிப்புணர்வு மற்றும் Online Dating உலகம் எவ்வாறு தொடர்ந்து விரைவாக மாறிக்கொண்டே இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதன் மூலம் தங்கள் பாதுகாப்பைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

உலகில் முதன்முறையாக, ஆஸ்திரேலிய அரசாங்கம் Dating app தயாரிப்பாளர்களுக்கான புதிய நடத்தை விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஒரு தன்னார்வ நடவடிக்கை, ஆனாலும் இது அவர்களின் பயனர்களை உன்னிப்பாகக் கண்காணித்து புகாரளிப்பதை எளிதாக்கும்.

“இணைய தளத்தில் குழந்தை துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டலின் அளவைப் பொறுத்தவரை, 21 ஆம் நூற்றாண்டின் கிட்டத்தட்ட இரண்டாவது உலகளாவிய தொற்றுநோயை நாம் இங்கு எதிர்கொள்கிறோம்” என்று நிபுணர் ஒருவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest news

சட்டவிரோத பொருட்கள் விற்பனையைத் தடுக்கத் தவறியதாக TEMU மீது குற்றச்சாட்டு

சீன ஆன்லைன் சில்லறை விற்பனையாளரான TEMU, அதன் தளத்தில் சட்டவிரோத தயாரிப்புகள் விற்பனையைத் தடுக்கத் தவறியதாக ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பு அமைப்புகளால் திங்களன்று குற்றம் சாட்டப்பட்டது. கடந்த...

காஸாவில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்

காஸா பகுதியில் உள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை விமானம் மூலம் விநியோகிக்க இஸ்ரேல் இராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்தத் திட்டத்தின் கீழ், விமானங்களிலிருந்து...

விக்டோரியாவில் அறிமுகமாகும் கூடுதல் வசதிகளுடன் புதிய ஆம்புலன்ஸ்

நரம்பியல் கோளாறுகள் உள்ள நோயாளிகளுக்கு ஆதரவளிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட Neuro-Inclusion Toolkit ஆம்புலன்ஸ் விக்டோரியா அறிமுகப்படுத்தியுள்ளது. இது நரம்பியல் நோயாளிகளுக்கு ஆம்புலன்ஸில் இருந்தே மிகவும் சௌகரியமாக உணர வைக்கும் என்று...

ஆஸ்திரேலியாவில் AI பயன்பாடு குறித்து புதிய சட்டங்கள்

குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கத்தை உருவாக்க AI ஐப் பயன்படுத்துவதை குற்றமாக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இந்த மசோதாவை அறிமுகப்படுத்தும் சுயேச்சை எம்.பி. Kate Chaney,...

ஆஸ்திரேலியாவில் AI பயன்பாடு குறித்து புதிய சட்டங்கள்

குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கத்தை உருவாக்க AI ஐப் பயன்படுத்துவதை குற்றமாக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இந்த மசோதாவை அறிமுகப்படுத்தும் சுயேச்சை எம்.பி. Kate Chaney,...

மேற்கு விக்டோரியாவில் சுட்டுக்கொல்லப்பட்ட 40 வயது நபர்!

Bendigo-இற்கும் Horsham-இற்கும் இடையிலான மேற்கு விக்டோரியன் நகரமான St Arnaud-இல் நடந்த துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திங்கட்கிழமை காலை 7:30 மணியளவில் Kings...