NewsDating செயலிகளால் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துவரும் பாலியல் வன்கொடுமைகள்

Dating செயலிகளால் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துவரும் பாலியல் வன்கொடுமைகள்

-

மெல்பேர்ணில் 17 வயது சிறுமி ஒருவர் Dating app மூலம் அறிமுகமான ஒரு இளைஞரை நேரில் சந்தித்து பாலியர் ரீதியாக பாதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று அண்மையில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் பொலிஸாரிடம் முறைபாடு ஒன்றையும் பதிசெய்துள்ளார்.

இதுகுறித்து விக்டோரியன் தடயவியல் குழந்தை மருத்துவ சேவையின் துணை இயக்குநரான தடயவியல் மருத்துவர் ஜோனா டல்லியிடம் கேட்டபோது, “கடந்த பத்தாண்டுகளில் பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் போக்கையே கொண்டுள்ளது” என்றார்.

சமூக ஊடக செயலிகளைப் பயன்படுத்தும் தனிப்பட்ட பயனர்களும், குழந்தைகளின் பெற்றோரும் அதிக விழிப்புணர்வு மற்றும் Online Dating உலகம் எவ்வாறு தொடர்ந்து விரைவாக மாறிக்கொண்டே இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதன் மூலம் தங்கள் பாதுகாப்பைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

உலகில் முதன்முறையாக, ஆஸ்திரேலிய அரசாங்கம் Dating app தயாரிப்பாளர்களுக்கான புதிய நடத்தை விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஒரு தன்னார்வ நடவடிக்கை, ஆனாலும் இது அவர்களின் பயனர்களை உன்னிப்பாகக் கண்காணித்து புகாரளிப்பதை எளிதாக்கும்.

“இணைய தளத்தில் குழந்தை துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டலின் அளவைப் பொறுத்தவரை, 21 ஆம் நூற்றாண்டின் கிட்டத்தட்ட இரண்டாவது உலகளாவிய தொற்றுநோயை நாம் இங்கு எதிர்கொள்கிறோம்” என்று நிபுணர் ஒருவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...