NewsDating செயலிகளால் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துவரும் பாலியல் வன்கொடுமைகள்

Dating செயலிகளால் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துவரும் பாலியல் வன்கொடுமைகள்

-

மெல்பேர்ணில் 17 வயது சிறுமி ஒருவர் Dating app மூலம் அறிமுகமான ஒரு இளைஞரை நேரில் சந்தித்து பாலியர் ரீதியாக பாதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று அண்மையில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் பொலிஸாரிடம் முறைபாடு ஒன்றையும் பதிசெய்துள்ளார்.

இதுகுறித்து விக்டோரியன் தடயவியல் குழந்தை மருத்துவ சேவையின் துணை இயக்குநரான தடயவியல் மருத்துவர் ஜோனா டல்லியிடம் கேட்டபோது, “கடந்த பத்தாண்டுகளில் பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் போக்கையே கொண்டுள்ளது” என்றார்.

சமூக ஊடக செயலிகளைப் பயன்படுத்தும் தனிப்பட்ட பயனர்களும், குழந்தைகளின் பெற்றோரும் அதிக விழிப்புணர்வு மற்றும் Online Dating உலகம் எவ்வாறு தொடர்ந்து விரைவாக மாறிக்கொண்டே இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதன் மூலம் தங்கள் பாதுகாப்பைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

உலகில் முதன்முறையாக, ஆஸ்திரேலிய அரசாங்கம் Dating app தயாரிப்பாளர்களுக்கான புதிய நடத்தை விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஒரு தன்னார்வ நடவடிக்கை, ஆனாலும் இது அவர்களின் பயனர்களை உன்னிப்பாகக் கண்காணித்து புகாரளிப்பதை எளிதாக்கும்.

“இணைய தளத்தில் குழந்தை துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டலின் அளவைப் பொறுத்தவரை, 21 ஆம் நூற்றாண்டின் கிட்டத்தட்ட இரண்டாவது உலகளாவிய தொற்றுநோயை நாம் இங்கு எதிர்கொள்கிறோம்” என்று நிபுணர் ஒருவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...