மெல்பேர்ண் வணிக நிறுவனத்திலிருந்து கண்ணாடியிழை பசு திருடப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏப்ரல் 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.20 மணியளவில் Truganina- Peterpaul Way பகுதிக்கு வந்த மூன்று அடையாளம் தெரியாத நபர்கள் இந்த திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
அவர்கள் முகங்களை மறைத்து கருப்பு நிற ஆடைகளை அணிந்திருந்ததாக கூறப்படுகிறது.
சாதாரண பசுவின் அளவுள்ள “Betsy” என்று பெயரிடப்பட்ட அந்த கண்ணாடியிழை பசுவை, ஒரு வாகனத்தில் ஏற்றி கொண்டுச் சென்றுள்ளனர்.
“Betsy” சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் உள்ள மற்றும் $3,500 மதிப்புடையதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
காணாமல் போன பசுவின் புகைப்படத்தை போலீசார் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளனர்.