Newsஅமைதிப் பேச்சுவார்த்தைக்கு மத்தியில் உக்ரைன் மீது ரஷ்யா சரமாரி டிரோன் தாக்குதல்

அமைதிப் பேச்சுவார்த்தைக்கு மத்தியில் உக்ரைன் மீது ரஷ்யா சரமாரி டிரோன் தாக்குதல்

-

ரஷ்யா-உக்ரைன் இடை யேயான போர் 3 ஆண்டு களுக்கு மேலாக நடந்து கொண்டிருக்கிறது. இப் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சித்து வருகிறார். இதற்கிடையே சமீபத்தில் ரஷ்யா -உக்ரைன் இடையே முதல் முறையாக போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சு வார்த்தை துருக்கியில் நடந்தது.

ஆனால் பேச்சுவார்த்தைக்கு மத்தியிலும் இருதரப்பும் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. நேற்று ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் அங்குள்ள விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன.

இந்த நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ்வில் ரஷ்யா மிகப்பெரிய அளவில் டிரோன்-ஏவுகணை தாக்கு தல்களை நடத்தியது. நகரின் பல்வேறு இடங்களில் தாக்குதல்கள் நடத்தப்பட்டது. இதனால் மக்கள் நிலத்தடி சுரங்கப்பாதை நிலையங்ளில் தஞ்சமடைந்தனர். கீவ்வின் ஒபோலோன் மாவட்டத்தில் உள்ள ஒரு வணிக வளாகம் மற்றும் ஒரு குடியிருப்பு கட்டிடம் மீது டிரோன் விழுந்து வெடித்தது.

சோலோமியன்ஸ்கி மாவட்டத்தில் 2 இடங்களில் தாக்குதல் காரணமாக பெரிய அளவில் தீப்பிடித்து எரிந்தது. இந்த தாக்குதல்களில் பொதுமக்கள் 8 பேர் காயம் அடைந்தனர்.

இந்த நிலையில் துருக்கியில் நடந்த நேரடி பேச்சு வார்த்தையின்போது ஆயிரம் கைதிகளை பரிமாற்றம் செய்து கொள்ள ரஷ்யாவும், உக்ரைனும் ஒப்பு கொண்டன. அதன்படி முதல் கட்டமாக கைதிகள் பரிமாற்றம் வடக்கு உக்ரைனில் உள்ள பெலாரஸ் எல்லையில் நடந்தது. இதில் இரு தரப்பில் இருந்தும் தலா 390 கைதிகள் பரிமாற்றம் செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கூறும்போது, முதல் கட்டமாக 390 உக்ரேனியர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். வார இறுதியில் மேலும் பலர் விடுவிக்கப்படுவார்கள். இது போரின் மிகப்பெரிய பரிமாற்றமாக மாறும் என்றார்.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...