Newsஅமைதிப் பேச்சுவார்த்தைக்கு மத்தியில் உக்ரைன் மீது ரஷ்யா சரமாரி டிரோன் தாக்குதல்

அமைதிப் பேச்சுவார்த்தைக்கு மத்தியில் உக்ரைன் மீது ரஷ்யா சரமாரி டிரோன் தாக்குதல்

-

ரஷ்யா-உக்ரைன் இடை யேயான போர் 3 ஆண்டு களுக்கு மேலாக நடந்து கொண்டிருக்கிறது. இப் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சித்து வருகிறார். இதற்கிடையே சமீபத்தில் ரஷ்யா -உக்ரைன் இடையே முதல் முறையாக போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சு வார்த்தை துருக்கியில் நடந்தது.

ஆனால் பேச்சுவார்த்தைக்கு மத்தியிலும் இருதரப்பும் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. நேற்று ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் அங்குள்ள விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன.

இந்த நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ்வில் ரஷ்யா மிகப்பெரிய அளவில் டிரோன்-ஏவுகணை தாக்கு தல்களை நடத்தியது. நகரின் பல்வேறு இடங்களில் தாக்குதல்கள் நடத்தப்பட்டது. இதனால் மக்கள் நிலத்தடி சுரங்கப்பாதை நிலையங்ளில் தஞ்சமடைந்தனர். கீவ்வின் ஒபோலோன் மாவட்டத்தில் உள்ள ஒரு வணிக வளாகம் மற்றும் ஒரு குடியிருப்பு கட்டிடம் மீது டிரோன் விழுந்து வெடித்தது.

சோலோமியன்ஸ்கி மாவட்டத்தில் 2 இடங்களில் தாக்குதல் காரணமாக பெரிய அளவில் தீப்பிடித்து எரிந்தது. இந்த தாக்குதல்களில் பொதுமக்கள் 8 பேர் காயம் அடைந்தனர்.

இந்த நிலையில் துருக்கியில் நடந்த நேரடி பேச்சு வார்த்தையின்போது ஆயிரம் கைதிகளை பரிமாற்றம் செய்து கொள்ள ரஷ்யாவும், உக்ரைனும் ஒப்பு கொண்டன. அதன்படி முதல் கட்டமாக கைதிகள் பரிமாற்றம் வடக்கு உக்ரைனில் உள்ள பெலாரஸ் எல்லையில் நடந்தது. இதில் இரு தரப்பில் இருந்தும் தலா 390 கைதிகள் பரிமாற்றம் செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கூறும்போது, முதல் கட்டமாக 390 உக்ரேனியர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். வார இறுதியில் மேலும் பலர் விடுவிக்கப்படுவார்கள். இது போரின் மிகப்பெரிய பரிமாற்றமாக மாறும் என்றார்.

நன்றி தமிழன்

Latest news

Harvard பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஆஸ்திரேலிய மாணவர்களின் நிலை என்ன?

Harvard-ல் சர்வதேச மாணவர்கள் சேருவதை டிரம்ப் நிர்வாகம் தடை செய்ததால் பாதிக்கப்பட்ட ஆஸ்திரேலியர்களுக்கு உதவ அமெரிக்க அரசாங்கத்திடம் ஆலோசனை கேட்டு வருவதாக அமெரிக்காவிற்கான ஆஸ்திரேலிய தூதர்...

கடுமையான குளிர் காலநிலையை எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு ஆஸ்திரேலியர்களுக்கு எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கு பகுதிகளில், இந்த ஆண்டின் மிகவும் சக்திவாய்ந்த குளிர் காற்று வீசும் என்பதால், பலத்த காற்று மற்றும் மழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் தென் கரோலினா , விக்டோரியா மற்றும் நியூ சவுத்...

தன்னார்வ நிர்வாகத்தின் கீழ் இயங்கவுள்ள Lucapa வைர நிறுவனம்

ஆஸ்திரேலியாவில் வைர உற்பத்தியை மீண்டும் தொடங்க Lucapa வைர நிறுவனம் தயாராகி வருகிறது. அவர்கள் இப்போது தன்னார்வ நிர்வாகத்தில் நுழைந்துவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. உலக வைர சந்தையில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க...

விக்டோரியாவின் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் விரிவுபடுத்த திட்டம்

விக்டோரியாவின் மிகப்பெரிய Fosterville தங்கச் சுரங்கத்தை விரிவுபடுத்தும் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் சுற்றுச்சூழல் பாதிப்பு அறிக்கையில் விக்டோரியன் திட்டமிடல் அமைச்சர் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது அடுத்த...

NSW-வில் தொடரும் வெள்ள அவசரநிலை – 50,000-இற்கும் மேற்பட்டோர் பாதிப்பு

மழை நின்றிருக்கலாம், ஆனால் வெள்ள அவசரநிலை இன்னும் முடிவடையவில்லை என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். 12-இற்கும் மேற்பட்ட நகரங்களில் சுமார் 50,000 மக்கள் இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும்...

தன்னார்வ நிர்வாகத்தின் கீழ் இயங்கவுள்ள Lucapa வைர நிறுவனம்

ஆஸ்திரேலியாவில் வைர உற்பத்தியை மீண்டும் தொடங்க Lucapa வைர நிறுவனம் தயாராகி வருகிறது. அவர்கள் இப்போது தன்னார்வ நிர்வாகத்தில் நுழைந்துவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. உலக வைர சந்தையில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க...