குயின்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ள ஒரு நகரத்தில் ஒரு குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, ஒரு பெரிய அளவிலான போலீஸ் விசாரணை நடந்து வருகிறது.
திங்கட்கிழமை மாலை 4.45 மணியளவில் Moore Park Beach-இல் உள்ள Regency சாலையில் உள்ள வீட்டிற்கு அவசர சேவைகள் அழைக்கப்பட்ட பின்னர் ஒரு குழந்தையை கண்டுபிடிக்கப்பட்டதாக குயின்ஸ்லாந்து போலீசார் தெரிவித்தனர்.
பொலிஸார் வீட்டிற்குள் வந்ததும் குறித்த குழந்தை மூச்சி பேச்சின்றி கிடந்துள்ளது. பின்னர் குறித்த குழந்தை இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
குறித்த சம்பவம் தொடர்பில் 32 வயது பெண் ஒருவரை பொலிஸார் விசாரணை செய்துவருகின்றனர்.
குற்றச் சம்பவம் நடந்த இடம் அறிவிக்கப்பட்டு, சூழ்நிலைகள் குறித்து விசாரணைகள் நடந்து வருகின்றன.