நியூ சவுத் வேல்ஸில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப்பெருக்கால் சுமார் 12,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். நாளை அந்தப் பகுதியில் பலத்த காற்று வீசும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலைமை தெற்கு மற்றும் கிழக்கு நியூ சவுத் வேல்ஸையும் பாதிக்கும் என்று தேசிய அவசரநிலை மேலாண்மை முகமை ஒருங்கிணைப்பாளர் ஜெனரல் Joe Buffon கூறினார்.
Eden கடற்கரையில் தற்போது பலத்த காற்று வீசும் எச்சரிக்கை அமலில் உள்ளது. மேலும் இது இன்று Batemans, Illawarra, Sydney, Hunter மற்றும் Macquarie கடற்கரைகளுக்கு நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சில கடலோரப் பகுதிகளில் மணிக்கு 75 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மரங்கள் முறிந்து விழும் அபாயம் உள்ளது.
இந்த இயற்கை பேரழிவு மக்கள், சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பொதுமக்களிடம் தெரிவித்தார்.
நாளை முதல், பேரிடர் பகுதிகளில் பொதுமக்களின் பாதுகாப்பை வழங்குவதற்காக மேலும் 70 பாதுகாப்புப் படை வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.