அடிலெய்டின் புறநகர்ப் பகுதியான ஹேப்பி வேலியில் புகைபோக்கியில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு சொத்துக்கள் முற்றாக எரிந்து சாம்லாகியுள்ளது. இதனால் சுமார் $250,000 சேதம் ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் வெளிப்புற ஹீட்டர் பாதுகாப்பு குறித்த நினைவூட்டலையும் தூண்டியுள்ளது.
நேற்று இரவு 8.30 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது. குறித்த இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க பெருதும் முயன்றனர்.
தீயணைப்பு வீரர்கள் வீடுகளில் இருந்து பல விலங்குகளை அகற்றினர், அவற்றில் ஒரு பாம்பு மற்றும் பறவைகள் அடங்கும். மேலும் ஒரு இளம் குழந்தையை மருத்துவ உதவியாளர்கள் பரிசோதித்தனர். தீ விபத்தில் இரண்டு கார்கள் எரிந்து நாசமாயின.
வெளிப்புற ஹீட்டர்களைப் பயன்படுத்தும் போது போதுமான காற்றோட்டம் இருப்பதை உறுதி செய்வதற்கும், எரியக்கூடிய பொருட்கள் குவிவதைத் தடுக்க வருடத்திற்கு ஒரு முறை அவற்றை சுத்தம் செய்வதற்கும் இந்த தீ விபத்து ஒரு நினைவூட்டலாகும் என்று பெருநகர தீயணைப்பு சேவை தெரிவித்துள்ளது.