Adelaideஅடிலெய்டில் பற்றி எரிந்த இரண்டு வீடுகள் - Heater பாதுகாப்பு குறித்து...

அடிலெய்டில் பற்றி எரிந்த இரண்டு வீடுகள் – Heater பாதுகாப்பு குறித்து எச்சரிக்கை

-

அடிலெய்டின் புறநகர்ப் பகுதியான ஹேப்பி வேலியில் புகைபோக்கியில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு சொத்துக்கள் முற்றாக எரிந்து சாம்லாகியுள்ளது. இதனால் சுமார் $250,000 சேதம் ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் வெளிப்புற ஹீட்டர் பாதுகாப்பு குறித்த நினைவூட்டலையும் தூண்டியுள்ளது. 

நேற்று இரவு 8.30 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது. குறித்த இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க பெருதும் முயன்றனர்.

தீயணைப்பு வீரர்கள் வீடுகளில் இருந்து பல விலங்குகளை அகற்றினர், அவற்றில் ஒரு பாம்பு மற்றும் பறவைகள் அடங்கும். மேலும் ஒரு இளம் குழந்தையை மருத்துவ உதவியாளர்கள் பரிசோதித்தனர். தீ விபத்தில் இரண்டு கார்கள் எரிந்து நாசமாயின.

வெளிப்புற ஹீட்டர்களைப் பயன்படுத்தும் போது போதுமான காற்றோட்டம் இருப்பதை உறுதி செய்வதற்கும், எரியக்கூடிய பொருட்கள் குவிவதைத் தடுக்க வருடத்திற்கு ஒரு முறை அவற்றை சுத்தம் செய்வதற்கும் இந்த தீ விபத்து ஒரு நினைவூட்டலாகும் என்று பெருநகர தீயணைப்பு சேவை தெரிவித்துள்ளது.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...