நியூ சவுத் வேல்ஸின் மத்திய வடக்கு கடற்கரையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்புப் பணிகள் தொடர்வதால், 1100க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் வாழத் தகுதியற்றதாகக் கருதப்பட்டுள்ளன.
பல்லாயிரக்கணக்கான வீடுகளில் சுத்தம் செய்தல் மற்றும் மதிப்பீடுகள் தொடர்வதால், NSW மாநில அவசர சேவை (SES), NSW மறுகட்டமைப்பு ஆணையத்துடன் இணைந்து செயல்படுகிறது.
குடியிருப்பு, வணிக, தொழில்துறை மற்றும் வெளிப்புறக் கட்டிடங்கள் உட்பட 10,070 க்கும் மேற்பட்ட சேத மதிப்பீடுகளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
NSW SES உதவி ஆணையர் கொலின் மலோன் கூறுகையில், வரும் நாட்களில் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் ஆதரவு மற்றும் உதவியை வழங்க மீட்பு பணியாளர்களுடன் இணந்து செயல்படும் என்றார்.
வீடு வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்தில் இருக்கும்போது, தங்கள் குடும்பங்களையும் பணியிடங்களையும் விட்டு தங்கள் சமூகங்களுக்கு உதவ வந்த தன்னார்வலர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் SW SES உதவி ஆணையர்.