தென்னாப்பிரிக்காவை சேர்ந்த 35 வயதான Racquel “Kelly” Smith எனும் பெண் தனது ஆறு வயது மகளை கடத்தி விற்பனை செய்ததற்காக அவளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆறு வயது சிறுமியான Joshlin Smith கடந்த ஆண்டு பெப்ரவரியில் Cape Townக்கு வடக்கே 135km தொலைவில் உள்ள மீன்பிடி நகரமான Saldanha விரிகுடாவில் உள்ள தனது வீட்டிலிருந்து காணாமல் போயுள்ளார்.
Racquel “Kelly” Smith, அவரது காதலன் Jacquen Appollis மற்றும் அவர்களது நண்பர் Steveno van Rhyn ஆகியோர் சிறுமியை கடத்தி 20,000 ரேண்டுக்கு ($1,700) விற்றதாக குற்றம் சாட்டப்பட்டனர்.

வியாழக்கிழமை, உள்ளூர் நேரப்படி, நீதிபதி Nathan Erasmus, Racquel மற்றும் அவரது இரண்டு சக குற்றவாளிகளுக்கு மனித கடத்தல் குற்றத்திற்காக ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். அவர்கள் அனைவருக்கும் கடத்தல் குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
விசாரணையின்போது குறித்த சிறுமி ஒரு பாரம்பரிய மருத்துவருக்கு விற்றதாகவும், குறித்த மருத்துவர் தனது உடல் உறுப்புகளுக்குப் பதிலாக குழந்தையைப் பெற விரும்பியுள்ளார் என்றும் கண்டறியப்பட்டது.
உலகிலேயே அதிக குற்ற விகிதங்களைக் கொண்ட நாடுகளில் தென்னாப்பிரிக்காவும் ஒன்று. மேலும் அங்கு குழந்தைகள் கடத்தல் அதிகரித்த வண்ணமே உள்ளது. 2023-24 நிதியாண்டில் தென்னாப்பிரிக்காவில் 17,000க்கும் மேற்பட்ட கடத்தல்கள் நடந்துள்ளன, இது முந்தைய ஆண்டை விட 11 சதவீதம் அதிகமாகும் என்று காவல்துறை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.