Newsதென்னாப்பிரிக்காவில் ஆறு வயது மகளை விற்ற பெண்

தென்னாப்பிரிக்காவில் ஆறு வயது மகளை விற்ற பெண்

-

தென்னாப்பிரிக்காவை சேர்ந்த 35 வயதான Racquel “Kelly” Smith எனும் பெண் தனது ஆறு வயது மகளை கடத்தி விற்பனை செய்ததற்காக அவளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஆறு வயது சிறுமியான Joshlin Smith கடந்த ஆண்டு பெப்ரவரியில் Cape Townக்கு வடக்கே 135km தொலைவில் உள்ள மீன்பிடி நகரமான Saldanha விரிகுடாவில் உள்ள தனது வீட்டிலிருந்து காணாமல் போயுள்ளார்.

Racquel “Kelly” Smith, அவரது காதலன் Jacquen Appollis மற்றும் அவர்களது நண்பர் Steveno van Rhyn ஆகியோர் சிறுமியை கடத்தி 20,000 ரேண்டுக்கு ($1,700) விற்றதாக குற்றம் சாட்டப்பட்டனர்.

வியாழக்கிழமை, உள்ளூர் நேரப்படி, நீதிபதி Nathan Erasmus, Racquel மற்றும் அவரது இரண்டு சக குற்றவாளிகளுக்கு மனித கடத்தல் குற்றத்திற்காக ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். அவர்கள் அனைவருக்கும் கடத்தல் குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 

விசாரணையின்போது குறித்த சிறுமி ஒரு பாரம்பரிய மருத்துவருக்கு விற்றதாகவும், குறித்த மருத்துவர் தனது உடல் உறுப்புகளுக்குப் பதிலாக குழந்தையைப் பெற விரும்பியுள்ளார் என்றும் கண்டறியப்பட்டது.

உலகிலேயே அதிக குற்ற விகிதங்களைக் கொண்ட நாடுகளில் தென்னாப்பிரிக்காவும் ஒன்று. மேலும் அங்கு குழந்தைகள் கடத்தல் அதிகரித்த வண்ணமே உள்ளது. 2023-24 நிதியாண்டில் தென்னாப்பிரிக்காவில் 17,000க்கும் மேற்பட்ட கடத்தல்கள் நடந்துள்ளன, இது முந்தைய ஆண்டை விட 11 சதவீதம் அதிகமாகும் என்று காவல்துறை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...