விக்டோரியா பிராந்தியத்தில் நான்கு ஆண்கள் காயமடைந்ததாகக் கூறப்படும் கத்திக்குத்து சம்பவம் தொடர்பில் ஒரு இளம் பெண் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
24 வயதான அந்த நபர், மெல்பேர்ணுக்கு கிழக்கே உள்ள Bairnsdale நகரில் அருகிலுள்ள துரித உணவு உணவக கார் நிறுத்துமிடத்தை நோக்கிச் செல்வதற்கு முன்பு, 45 வயது ஆண் ஊழியரின் வயிற்றில் குத்தியதாகக் கூறப்படுகிறது.
பின்னர் 21 வயதான ஒரு வாலிபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின் அவரின் வயிற்றில் குத்தியுள்ளார்.
பின்னர் அவள் Macleod தெருவில் உள்ள ஒரு ஹோட்டலுக்குள் நுழைந்து 52 வயதுடைய ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் அவரது கையில் உயிருக்கு ஆபத்தான வெட்டுக்கள் ஏற்பட்டன.
பின்னர் ரயில் நிலையத்தில் 25 வயதுடைய ஒருவரின் தோளில் அவள் குத்தியதாகக் கூறப்படுகிறது.

சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த போலீசார் குறித்த பெண்ணை கைது செய்தனர். பாதிக்கப்பட்டவர்கள் லேசான காயங்களுடன் உயிர்தப்பியதோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.