நியூ சவுத் வேல்ஸில் போதைக்கு அடிமையான 59 வயதான David Andrew Mapp என்ற நபர் தனது வயதான தாயாரை பூந்தொட்டியால் அடித்துக் கொன்றதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
2022 இல் நடந்த இந்த சம்பவத்தில், அவர் தனது தொலைக்காட்சியை அடகு வைத்து பணம் பெற முயன்றுள்ளார்.
இதனால் தாயுடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக அந்த நபர் தன் தாயை 15 கிலோ எடையுள்ள பூந்தொட்டியால் தாக்கியதாக கூறப்படுகிறது.
நேற்று, நியூ சவுத் வேல்ஸ் உச்ச நீதிமன்றம் அவருக்கு 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.
தாக்குதலால் தாயின் மூளையின் மேற்பரப்பில் 40mm வெட்டு மற்றும் இரத்தப்போக்கு காரணமாக மரணம் நிகழ்ந்தது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
விசாரணையில், Mapp நீண்டகாலமாக போதைப் பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததாகவும், பணம் கேட்பதால் தனது தாயுடன் தொடர்ந்து வாக்குவாதம் செய்ததாகவும் தெரியவந்தது.
கொலை நடந்த சிறிது நேரத்திற்குப் பிறகு, அருகிலுள்ள Long Jettyல் உள்ள ஒரு அடகுக் கடைக்குள் Mapp நுழைவது கண்காணிப்பு கேமரா காட்சிகளில் காணப்பட்டது. அங்கு அவர் தொலைக்காட்சி மற்றும் Whipper Sniper-ஐ $200க்கு விற்றுள்ளார். அதை அவர் போதைப்பொருள் வாங்கப் பயன்படுத்தியுள்ளர் என்பதும் மேலதிக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.