Newsவரும் வாரத்தில் மோசமான வானிலைக்கு தயாராக இருக்குமாறு WA எச்சரிக்கை

வரும் வாரத்தில் மோசமான வானிலைக்கு தயாராக இருக்குமாறு WA எச்சரிக்கை

-

முடிவடையும் இலையுதிர் காலத்திற்குப் பிறகு, மேற்கு ஆஸ்திரேலியாவின் முதல் குளிர் காலம் இந்த வார இறுதியில் ஆரம்பிக்கவுள்ளது.

இதனால் பலத்த மழை, இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று வீசும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மேற்கு ஆஸ்திரேலியர்களுக்கு மோசமான வானிலை புதியதல்ல. கடந்த ஆண்டில் மட்டும் Bunbury-ஐ ஒரு சூறாவளி தாக்கியது மற்றும் Perth Hills-இல் ஒரு microburst ஏற்பட்டது.

ஆனால், நிபுணர்களின் கூற்றுப்படி, அடுத்த வாரம் இந்த மோசமான வானிலை தன் வேலையை காட்ட ஆரம்பிக்கும் என்றும், குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளைத் தயார் செய்யுமாறு வலியுறுத்தப்படுகிறார்கள்.

அடுத்த வாரத்தில் 100 மில்லிமீட்டர் வரை பெய்யும். ஆனால் எங்கு அதிகம் பாதிக்கப்படும் என்பதை முன்னறிவிப்பாளர்களால் சரியாகச் சொல்ல முடியாது என்று கூறியுள்ளனர் வானிலை நிபுணர்கள்.

மக்கள் தங்கள் வீட்டைச் சுற்றியும், முற்றத்தைச் சுற்றியும் சுத்தம் செய்யுமாறும், மேலும் சேதத்தை ஏற்படுத்தக்கூடிய மரங்கள், மரக்கிளைகளை அகற்றுமாறும் தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்தப் புயல் நிலைமை வடமேற்கு முனையிலிருந்து தென்கிழக்கு வரை நீண்டு மூன்று நாட்கள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Latest news

இந்த மாத இறுதியில் விதிக்கப்படும் ஆஸ்திரேலியா மீதான டிரம்பின் வரிகள்

ஜூலை மாத இறுதியில் இருந்து மருந்து இறக்குமதிகளுக்கு "அநேகமாக" வரிகளை விதிப்பேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறுகிறார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், குறைந்த...

ஆஸ்திரேலியாவில் அரசாங்கத் தடையால் பியர் விலை உயருமா?

RBA-வின் கூடுதல் கட்டணத்தை நீக்குவதற்கான முன்மொழிவு காரணமாக ஒரு பியன் விலை உயரக்கூடும் என்று ஒரு பிராந்திய Pub உரிமையாளர் எச்சரித்துள்ளார். அவர்கள் அந்தக் கட்டணத்தை வாடிக்கையாளர்களுக்குத்...

உலகின் ‘வயதான மராத்தான் ஓட்டப்பந்தய வீரர்’ விபத்தில் மரணம்

உலகின் வயதான மராத்தான் ஓட்டப்பந்தய வீராங்கனை என்று நம்பப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஓட்டப்பந்தய வீரர் Fauja Singh, கார் மோதி உயிரிழந்தார். உயிரிழக்கும்போது அவருக்கு 114...

எஃகு உற்பத்தியில் ஒரு புதிய புரட்சி வருகிறது – பிரதமர் அல்பானீஸ்

ஆஸ்திரேலியாவும் சீனாவும் பசுமை எஃகு (green steel) துறையில் இணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கூறுகிறார். ஆஸ்திரேலிய இரும்புத் தாது உற்பத்தியாளர்களுக்கும் சீன...

எஃகு உற்பத்தியில் ஒரு புதிய புரட்சி வருகிறது – பிரதமர் அல்பானீஸ்

ஆஸ்திரேலியாவும் சீனாவும் பசுமை எஃகு (green steel) துறையில் இணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கூறுகிறார். ஆஸ்திரேலிய இரும்புத் தாது உற்பத்தியாளர்களுக்கும் சீன...

பெர்த்தில் ஆண் குழந்தையைக் கொலை செய்த தாய்

பெர்த்தின் வடக்கில் தனது ஏழு மாத மகனைக் கொலை செய்ததாக ஒரு தாய் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  நேற்று அதிகாலை 3.10 மணியளவில் பால்கட்டாவில் உள்ள...