முடிவடையும் இலையுதிர் காலத்திற்குப் பிறகு, மேற்கு ஆஸ்திரேலியாவின் முதல் குளிர் காலம் இந்த வார இறுதியில் ஆரம்பிக்கவுள்ளது.
இதனால் பலத்த மழை, இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று வீசும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மேற்கு ஆஸ்திரேலியர்களுக்கு மோசமான வானிலை புதியதல்ல. கடந்த ஆண்டில் மட்டும் Bunbury-ஐ ஒரு சூறாவளி தாக்கியது மற்றும் Perth Hills-இல் ஒரு microburst ஏற்பட்டது.
ஆனால், நிபுணர்களின் கூற்றுப்படி, அடுத்த வாரம் இந்த மோசமான வானிலை தன் வேலையை காட்ட ஆரம்பிக்கும் என்றும், குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளைத் தயார் செய்யுமாறு வலியுறுத்தப்படுகிறார்கள்.
அடுத்த வாரத்தில் 100 மில்லிமீட்டர் வரை பெய்யும். ஆனால் எங்கு அதிகம் பாதிக்கப்படும் என்பதை முன்னறிவிப்பாளர்களால் சரியாகச் சொல்ல முடியாது என்று கூறியுள்ளனர் வானிலை நிபுணர்கள்.
மக்கள் தங்கள் வீட்டைச் சுற்றியும், முற்றத்தைச் சுற்றியும் சுத்தம் செய்யுமாறும், மேலும் சேதத்தை ஏற்படுத்தக்கூடிய மரங்கள், மரக்கிளைகளை அகற்றுமாறும் தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்தப் புயல் நிலைமை வடமேற்கு முனையிலிருந்து தென்கிழக்கு வரை நீண்டு மூன்று நாட்கள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.