பாதுகாப்பு மற்றும் தனியுரிமைக்கு கடுமையான அச்சுறுத்தலாக இருக்கும் smart கண்ணாடிகள், இப்போது நாடு தழுவிய அளவில் கடுமையான ஆபத்தை ஏற்படுத்தி வருவதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த smart கண்ணாடிகள் பெரும்பாலும் வழக்கமான கண்ணாடிகளை ஒத்திருக்கும், மேலும் அவை discreet cameras, microphones மற்றும் display screens கொண்ட lenses-ஐ கொண்டிருக்கும்.
அவை கவர்ச்சிகரமான பாணிகளிலும் பல்வேறு செயல்பாடுகளிலும் விற்கப்படுகின்றன.
ஆஸ்திரேலியாவில் 13.5 சதவீத smart கண்ணாடி பயனர்கள் வாகனம் ஓட்டும் போது அல்லது சைக்கிள் ஓட்டும் போது அவற்றைப் பயன்படுத்துவதாக மோனாஷ் பல்கலைக்கழக ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது.
மற்ற தரப்பினரின் அனுமதியின்றி வீடியோக்களைப் பதிவு செய்ய smart கண்ணாடிகள் பயன்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.
சாலைப் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை ஆகிய இரண்டிற்கும் smart கண்ணாடிகள் பரவலான அச்சுறுத்தலாக மாறுவதற்கு முன்பு அரசாங்கம் கடுமையான ஒழுங்குமுறைகளை விதிக்க வேண்டும் என்று நிபுணர் பேராசிரியர் ஹுசைன் தியா கூறினார்.
இந்தக் கண்ணாடிகள் சாதனத்திலேயே வீடியோக்களைப் பதிவுசெய்து சேமிப்பது மட்டுமல்லாமல், மொபைல் செயலி மூலம் இணையத்தில் வீடியோவை வெளியிடவும் முடியும் என்பது ஆபத்தானது என்று நிபுணர் குறிப்பிட்டார்.
Ray-Ban, Meta, Amazon மற்றும் Google போன்ற முக்கிய பிராண்டுகள் அனைத்தும் இந்த smart கண்ணாடிகளை விற்பனை செய்கின்றன. மேலும் பேராசிரியர் அதிகாரிகள் இந்த விஷயத்தில் விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.