Sydneyசிட்னியில் ஒரு வீட்டின் முன்பக்கத்தில் மோதிய கார் - குழந்தை உயிரிழப்பு

சிட்னியில் ஒரு வீட்டின் முன்பக்கத்தில் மோதிய கார் – குழந்தை உயிரிழப்பு

-

சிட்னியின் மேற்கில் உள்ள ஒரு வீட்டின் முன்பக்கத்தில் கார் மோதியதில் 18 மாத குழந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த அவசர சேவைகள் உடனே குழந்தைக்கு சிகிச்சைகள் அளித்தன. பின்னர் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் Westmead-இல் உள்ள குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

காரை ஓட்டிச் சென்றது 28 வயதுடைய பெண் ஒருவர் என்று போலீசாருக்குத் தெரிவிக்கப்பட்டது.

அந்தப் பெண் கடைகளில் இருந்து திரும்பி வந்து வாகனம் நிறுத்தும் இடத்தில் நின்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

கட்டாயப் பரிசோதனைக்காக அவர் வெஸ்ட்மீட் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் நடபெறுவதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Latest news

முர்ரே ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள்

நியூ சவுத் வேல்ஸ்/விக்டோரியன் எல்லையில் உள்ள மில்டுரா அருகே முர்ரே நதிக்கு அப்பால் உள்ள புதர் நிலத்தில் மனித மண்டை ஓட்டின் பகுதி எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. திங்கட்கிழமை...

பயணிகளுக்கு சிறப்பு தள்ளுபடியை வழங்கும் இரண்டு ஆஸ்திரேலிய விமான நிறுவனங்கள்

ஆஸ்திரேலியாவின் இரண்டு முக்கிய விமான நிறுவனங்களான Qantas மற்றும் Jetstar, இந்த ஆண்டு சிறப்பு தள்ளுபடிகளை வழங்கத் தொடங்கியுள்ளன. அதன்படி, உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களுக்கு இந்த...

மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்களுக்கு கிடைக்கவுள்ள பணப் பலன்கள்

அரசாங்க விசாரணையைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய வங்கிகள் 93 மில்லியன் டாலர்களை திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் பெரிய அளவிலான...

காஸாவில் இதுவரை 60,000 பேர் பலி – ஆயிரக்கணக்கானோர் மாயம்

காஸா பகுதியில் இஸ்ரேலின் இராணுவத் தாக்குதலில் ஒக்டோபர் 7, 2023 முதல் இன்றுவரை குறைந்தது 60,000 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக, என்கிளேவின் சுகாதார அமைச்சரகம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு...

தன் மகன்களை வேற்றுகிரகவாசிகள் என நினைத்து கொல்ல முயன்ற தாய்

தனது இரண்டு மகன்களைக் குத்திக் கொல்ல முயன்ற தாய்க்கு 15 ஆண்டுகள் மனநலக் கண்காணிப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அடிலெய்டில் வசித்து வந்த ஒரு பெண், தனது இரண்டு மகன்களையும்...

வேப் தடை இளைஞர்களிடையே புகைபிடிப்பதை அதிகரித்துள்ளதா?

வேப்பிங் தடை இளைஞர்களிடையே புகைபிடிப்பதை அதிகரித்துள்ளது என்பதைக் குறிக்கும் ஆராய்ச்சியை மத்திய அரசு நிராகரித்துள்ளது. ஜூலை 2024 இல் தொடங்கிய வேப் விற்பனையின் படிப்படியான தடைக்குப் பிறகு...