தாய்லாந்தை பிரதிநிதித்துவப்படுத்திய Suchata Chuangsri, 72வது உலக அழகி பட்டத்தை வென்றார்.
ஒவ்வொரு கண்டப் பகுதியிலிருந்தும் ஐந்து அரையிறுதிப் போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் அந்த 20 பேரில் ஆஸ்திரேலிய போட்டியாளரும் ஒருவர்.
1951 ஆம் ஆண்டு கிரேட் பிரிட்டனில் தொடங்கிய 72வது உலக அழகி போட்டி, மே 7 ஆம் திகதி இந்தியாவின் தெலுங்கானாவில் தொடங்கியது.
பிரேசில், மார்டினிக், எத்தியோப்பியா, நமீபியா, போலந்து, உக்ரைன், பிலிப்பைன்ஸ் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த இறுதி 8 போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
போட்டியின் இறுதிப் போட்டி நேற்று பிற்பகல் முதல் இந்தியாவின் ஹைதராபாத்தில் உள்ள HITEX மாநாட்டு மையத்தில் நடைபெற்றது.
‘Miss World 2025’ கிரீடத்தை வெல்லும் நோக்கத்துடன் உலகம் முழுவதிலுமிருந்து 100க்கும் மேற்பட்ட அழகு ராணிகள் நேற்று போட்டியிட்டனர்.
ஒவ்வொரு கட்டமும் ஒரு மாத காலப்பகுதியில் வெவ்வேறு கருப்பொருள்களின் கீழ் நடைபெற்றது.