News15 ஆண்டுகால சேமிப்பை நவீன மோசடியால் இழந்த ஆஸ்திரேலிய தம்பதி!

15 ஆண்டுகால சேமிப்பை நவீன மோசடியால் இழந்த ஆஸ்திரேலிய தம்பதி!

-

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சாரா, லைனே ராபின்சன் தம்பதி மவுண்ட் நாதனில் தங்களது கனவு கிராமப்புற வீட்டில் குடியேற திட்டமிட்டனர். அதற்காக தங்கள் வாழ்நாள் (15 ஆண்டுகள்) சேமிப்பை எல்லாம் சேர்த்து மொத்தம் 250,000 டொலர்களை ஒன்லைன் வாயிலாக ANZ நிறுவனத்திற்கு செலுத்தியுள்ளனர்.

ஆனால், Settlement நெருங்கும் சமயத்தில் குறித்த நிறுவனம் அமைதியாகிவிட்டதால், தம்பதியரின் கெட்ட கனவு தொடங்கியது.

அதாவது, ராபின்சன் குடும்பத்திற்கு தெரியாமல் மோசடி நபர்கள், மின்னஞ்சல் சங்கிலியை இடைமறித்து நிறுவனத்தைப் போலவே செயல்பட்டுள்ளனர். மோசடி மின்னஞ்சல்கள் கிட்டத்தட்ட முறையான கடிதப் போக்குவரத்தைப் போலவே இருந்தன. ஆனால் ஒரு நுட்பமான சிவப்புக் கொடியைக் கொண்டிருந்தன. அனுப்புநரின் மின்னஞ்சலில் இறுதியில் ஒரு எளிய ‘.au’ இல்லை.

இதனைத் தொடர்ந்து, உண்மையான ஆவண தயாரிப்பாளர் அவர்களை தொடர்புகொண்டபோது மோசடி வெளியிடப்பட்டது. குறித்த நிறுவனத்திற்கு 60,000 டொலர்கள்தான் செலுத்தப்பட்டிருந்தது. இரண்டாவது மற்றும் மிகப்பெரிய தொகையான 252,000 டொலர்கள் காணாமல் போனது. இதனால் அதிர்ச்சியடைந்த ராபின்சன் குடும்பம் நிறுவனத்தை கேட்ட பின்னர், ஆரம்பத்தில் 80,000 டொலர்களை ANZஆல் மீட்க முடிந்தது. 

துரதிர்ஷ்டவசமாக மீதமுள்ள 170,000 டொலர்கள் பணத்தை மீட்க முடியவில்லை. வங்கி இப்போது தலையிட்டு முழுத் தொகையையும் தம்பதிக்கு திருப்பிச் செலுத்தியுள்ளது.

இதுகுறித்து சாரா கூறுகையில், ‘நான் மோசடி செய்பவர்களுடன் ஒன்றரை வாரமாகத் தெரியாமல் பேசிக் கொண்டிருந்தேன். மின்னஞ்சல்களை நம்பி பணம் செலுத்த ராபின்சன் ANZ கிளைக்குச் சென்றார். அங்கு கணக்குப் பெயர் விவரங்களுடன் பொருந்தவில்லை. அன்று அவர்கள் தவறு செய்திருப்பதை அவர்களால் பார்க்க முடிந்தது. அவர்களது ஊழியர் பொருத்தமான சோதனைகளை செய்ய தவறிவிட்டார், எங்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டார்’ என குற்றம்சாட்டினார்.

Latest news

பிரித்தானியாவில் விலங்குகள் நலனில் புரட்சிகர மாற்றம்

“பிரித்தானியாவில் விலங்குகள் நலனை மேம்படுத்தும் நோக்கில், ‘தலைமுறையில் காணாத மிகப்பெரிய சீர்திருத்தங்களை’ அந்நாட்டு அரசாங்கம் நேற்று (22) அறிவித்துள்ளது. இதன்படி, நாய்களைக் கொடூரமான முறையில் இனப்பெருக்கம் செய்யும்...

ஆஸ்திரேலிய அரசின் புதிய சட்டங்களுக்கு மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு

ஆஸ்திரேலியாவின் சிட்னி Bondi கடற்கரை தாக்குதலைத் தொடர்ந்து, நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு துப்பாக்கிப் பயன்பாடு மற்றும் போராட்டங்களைக் கட்டுப்படுத்தும் புதிய சட்டங்களை அவசரமாக...

NSW-வில் Pub மீது மோதிய கார் – 7 பேர் காயம்

நியூ சவுத் வேல்ஸின் Capertee-இல் உள்ள ராயல் ஹோட்டல் Pub மீது கார் மோதியதில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை...

Bondi தாக்குதலுக்குப் பிறகு அல்பானீஸ் வெளியிட்டுள்ள புதிய விதிகள்

Bondi கடற்கரையில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, வெறுப்பு, பிரிவினை மற்றும் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராட அரசாங்கம் பல புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளதாக...

மெல்பேர்ணில் கார் திருட்டில் ஈடுபட்ட இரு சிறுமிகள்

மெல்பேர்ணில் கார் திருட்டு தொடர்பாக இரண்டு சிறுமிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று அதிகாலை 2 மணியளவில் பிரஸ்டனில் உள்ள பெல் தெருவில் திருடப்பட்ட நீல நிற டொயோட்டா...

NSW-வில் Pub மீது மோதிய கார் – 7 பேர் காயம்

நியூ சவுத் வேல்ஸின் Capertee-இல் உள்ள ராயல் ஹோட்டல் Pub மீது கார் மோதியதில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை...