வெளிநாட்டு மருத்துவ மாணவரை முத்தமிட்டு தகாத முறையில் தொட்ட டாஸ்மேனிய மருத்துவர் ஒருவருக்கு ஒரு மாத இடைநீக்கம் விதிக்கப்பட்டுள்ளதுடன். இவருக்கு மாணவர்களை மேற்பார்வையிட ஒரு வருடத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் St Marys General Practice-இல் நான்கு வார பயிற்சியின் போது, சர்வதேச மாணவருடன் பலமுறை உடல் ரீதியான நடத்தையில் ஈடுபட்டதாக 56 வயதான டாக்டர் Cyril Swe Latt ஒப்புக்கொண்டார்.
TASCAT அவரது நடத்தையை தொழில்முறை தவறான நடத்தை என்று கண்டறிந்தது. இது தொழில்முறைக்கு மாறான நடத்தை மற்றும் ஒரு அற்பமான குற்றச்சாட்டு என்ற அவரது சட்டக் குழுவின் வாதத்தை நிராகரித்தது.
மருத்துவரின் நடவடிக்கைகள் “நம்பிக்கை மீறல் மற்றும் தொழில்முறை எல்லைகளை மீறுதல்” என்று தீர்ப்பாயம் கூறியது.
டாக்டர் Latt 2023 இல் St Marys-ஐ விட்டு வெளியேறி தற்போது ஓட்லாண்ட்ஸில் பயிற்சி செய்து வருகிறார். அவரது இடைநீக்கம் மே 26 அன்று தொடங்கியது.