Tasmaniaடாஸ்மேனியாவில் குப்பைத் தொட்டியில் கண்டெடுக்கப்பட்ட உடல்

டாஸ்மேனியாவில் குப்பைத் தொட்டியில் கண்டெடுக்கப்பட்ட உடல்

-

டாஸ்மேனியாவில் உள்ள ஒரு குப்பைத் தொட்டியில் ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளமை அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது.

greater Hobart-இல் உள்ள Percy தெருவில் இன்று காலை கழிவு ஒப்பந்ததாரரால் (garbage contractor) கண்டெடுக்கப்பட்ட உடல் 45 வயதுடைய ஒருவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது. முதலில் அவர் அதை ஒரு பொம்மை என்றே நினைத்ததாகவும், பின்னரே அது ஒரு நபருடைய உடல் என்றும் புரிந்துகொண்டதாக கழிவு ஒப்பந்ததாரர் தெரிவித்தார்.

மரணம் நிகழ்ந்த விதம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக டாஸ்மேனியா காவல்துறை துப்பறியும் ஆய்வாளர் டேவிட் கில் தெரிவித்தார்.

பெயர் வெளியிடப்படாத இந்த 45 வயது நபர் பல மாதங்களாக அவருடைய வீட்டில் வசிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

இந்த நபரை அவரது குடும்பத்தினர் கடைசியாக சனிக்கிழமை பார்த்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த நபரின் உடல் கண்டெடுக்கப்பட்டபோது எந்த காயங்களும் இல்லை என்றாலும், இன்று பிரேத பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சனிக்கிழமை இரவு முதல் திங்கள் காலை வரை Percy தெரு பகுதியைச் சுற்றியுள்ள ஏதேனும் சந்தேகத்திற்குரிய நடமாட்டம் குறித்த தகவல்கள் தெரிந்தால் காவல்துறைக்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...