Tasmaniaடாஸ்மேனியாவில் குப்பைத் தொட்டியில் கண்டெடுக்கப்பட்ட உடல்

டாஸ்மேனியாவில் குப்பைத் தொட்டியில் கண்டெடுக்கப்பட்ட உடல்

-

டாஸ்மேனியாவில் உள்ள ஒரு குப்பைத் தொட்டியில் ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளமை அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது.

greater Hobart-இல் உள்ள Percy தெருவில் இன்று காலை கழிவு ஒப்பந்ததாரரால் (garbage contractor) கண்டெடுக்கப்பட்ட உடல் 45 வயதுடைய ஒருவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது. முதலில் அவர் அதை ஒரு பொம்மை என்றே நினைத்ததாகவும், பின்னரே அது ஒரு நபருடைய உடல் என்றும் புரிந்துகொண்டதாக கழிவு ஒப்பந்ததாரர் தெரிவித்தார்.

மரணம் நிகழ்ந்த விதம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக டாஸ்மேனியா காவல்துறை துப்பறியும் ஆய்வாளர் டேவிட் கில் தெரிவித்தார்.

பெயர் வெளியிடப்படாத இந்த 45 வயது நபர் பல மாதங்களாக அவருடைய வீட்டில் வசிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

இந்த நபரை அவரது குடும்பத்தினர் கடைசியாக சனிக்கிழமை பார்த்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த நபரின் உடல் கண்டெடுக்கப்பட்டபோது எந்த காயங்களும் இல்லை என்றாலும், இன்று பிரேத பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சனிக்கிழமை இரவு முதல் திங்கள் காலை வரை Percy தெரு பகுதியைச் சுற்றியுள்ள ஏதேனும் சந்தேகத்திற்குரிய நடமாட்டம் குறித்த தகவல்கள் தெரிந்தால் காவல்துறைக்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Latest news

பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரோனின் மெழுகு சிலை திருட்டு

பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரோனின் மெழுகு சிலையை போராட்டக்காரர்கள் திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனிடையே, ரஷ்யாவுடன்...

மூன்று பெண்களின் AI படங்களை பதிவேற்றுவதாக மிரட்டியதற்காக ஆடவர் மீது பாலியல் குற்றச்சாட்டு

மூன்று பெண்களைப் பாலியல் ரீதியாகப் பயன்படுத்தி, AI-யால் கையாளப்பட்ட படங்களை ஆன்லைனில் வெளியிடுவதாக மிரட்டியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் முதல் முறையாக நீதிமன்றத்தில் ஆஜரானார். Benjamin Michael...

மும்பை விமான நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட விஷப் பாம்புகள் அடங்கிய பை

 நாட்டிற்குள் விஷப் பாம்புகள் மற்றும் பிற ஊர்வனவற்றை பையில் மறைத்து நாட்டிற்குள் கடத்த முயன்ற ஒருவரை இந்திய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். தாய்லாந்து பயணத்திலிருந்து திரும்பிய...

வீட்டுக் கடன் முறைகேடுக்காக RAMS கடன் நிறுவனம் மீது வழக்கு

வீட்டுக் கடன்களைச் செயலாக்குவதில் முறைகேடு நடந்ததாகக் கூறி, RAMS வீட்டுக் கடன் நிறுவனம் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அது ஆஸ்திரேலிய பத்திரங்கள் மற்றும் முதலீட்டு ஆணையத்திடமிருந்து (ASIC)...

மும்பை விமான நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட விஷப் பாம்புகள் அடங்கிய பை

 நாட்டிற்குள் விஷப் பாம்புகள் மற்றும் பிற ஊர்வனவற்றை பையில் மறைத்து நாட்டிற்குள் கடத்த முயன்ற ஒருவரை இந்திய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். தாய்லாந்து பயணத்திலிருந்து திரும்பிய...

வீட்டுக் கடன் முறைகேடுக்காக RAMS கடன் நிறுவனம் மீது வழக்கு

வீட்டுக் கடன்களைச் செயலாக்குவதில் முறைகேடு நடந்ததாகக் கூறி, RAMS வீட்டுக் கடன் நிறுவனம் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அது ஆஸ்திரேலிய பத்திரங்கள் மற்றும் முதலீட்டு ஆணையத்திடமிருந்து (ASIC)...