டாஸ்மேனியாவில் உள்ள ஒரு குப்பைத் தொட்டியில் ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளமை அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது.
greater Hobart-இல் உள்ள Percy தெருவில் இன்று காலை கழிவு ஒப்பந்ததாரரால் (garbage contractor) கண்டெடுக்கப்பட்ட உடல் 45 வயதுடைய ஒருவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது. முதலில் அவர் அதை ஒரு பொம்மை என்றே நினைத்ததாகவும், பின்னரே அது ஒரு நபருடைய உடல் என்றும் புரிந்துகொண்டதாக கழிவு ஒப்பந்ததாரர் தெரிவித்தார்.
மரணம் நிகழ்ந்த விதம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக டாஸ்மேனியா காவல்துறை துப்பறியும் ஆய்வாளர் டேவிட் கில் தெரிவித்தார்.
பெயர் வெளியிடப்படாத இந்த 45 வயது நபர் பல மாதங்களாக அவருடைய வீட்டில் வசிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.
இந்த நபரை அவரது குடும்பத்தினர் கடைசியாக சனிக்கிழமை பார்த்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த நபரின் உடல் கண்டெடுக்கப்பட்டபோது எந்த காயங்களும் இல்லை என்றாலும், இன்று பிரேத பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சனிக்கிழமை இரவு முதல் திங்கள் காலை வரை Percy தெரு பகுதியைச் சுற்றியுள்ள ஏதேனும் சந்தேகத்திற்குரிய நடமாட்டம் குறித்த தகவல்கள் தெரிந்தால் காவல்துறைக்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.