சட்டவிரோத புகையிலை கறுப்புச் சந்தை தெருக்களில் ஆதிக்கம் செலுத்தி வருவதாகக் கூறி, அதை சுத்தம் செய்ய மத்திய அரசு தலையிட வேண்டும் என்று NSW பிரதமர் கிறிஸ் மின்ஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
சிட்னி மற்றும் NSW வீதிகளில் பரவி வரும் சட்டவிரோத புகையிலையின் முக்கிய அம்சமாக தீ குண்டுவெடிப்புகள், வாகனம் மூலம் துப்பாக்கிச் சூடு, ஆயுதமேந்திய கொள்ளைகள் மற்றும் கும்பல் போர் ஆகியவை உள்ளன.
இது தற்போது சுகாதாரத் துறையால் கண்காணிக்கப்படுகிறது. ஆனாலும் மின்ஸ் இதற்கொரு மாற்றத்தை விரும்புகிறார்.
தெற்கு NSW-ல், டென்மார்க்கின் அதே பரப்பளவில் உள்ள ஒரு பகுதியில், சட்டவிரோத புகையிலை மற்றும் வேப் விற்பனையைக் கண்காணிப்பதற்குப் பொறுப்பான ஒரே ஒரு அதிகாரி மட்டுமே உள்ளார்.
ஏற்கனவே பணிச்சுமையில் உள்ள காவல்துறையினரிடம் பொறுப்பை ஒப்படைக்க பிரதமர் பரிந்துரைத்தார்.
எனினும் அதிகாரிகள் இதில் மகிழ்ச்சியடையவில்லை என்றும், இது முக்கியமான பகுதிகளில் பணியாளர்கள் பற்றாக்குறையை ஏற்படுத்தும் என்றும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.