தெற்கு ஆஸ்திரேலியாவின் நீர்நிலைகளில் ஒன்றான Coorong தற்போது நச்சுப் பாசிப் பூப்பினால் பாதிக்கப்பட்டுள்ளது.
Coorongல் மீன்கள் மற்றும் புழுக்கள் உட்பட இறந்த கடல்வாழ் உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, மீளமுடியாத சுற்றுச்சூழல் சேதம் குறித்த கவலைகளைத் தூண்டியுள்ளது. கடற்கரையின் பிற பகுதிகளை முன்னர் பாதித்த பாசிப் பூக்களால் இந்த இறப்புகள் ஏற்பட்டதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இறப்புகளுக்கான காரணம் குறித்த கூடுதல் சோதனைகளை மாநில விஞ்ஞானிகள் நடத்தி வருகின்றனர்.
கடந்த வாரம் ஏற்பட்ட புயல்களால் இந்த பாசிப் பூக்கள் நுழைந்ததிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
Eyre Peninsulaல் உள்ள Tumby விரிகுடா அருகே நூற்றுக்கணக்கான இறந்த கணவாய் மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் அடிலெய்டுக்கு அருகிலுள்ள லார்க்ஸ் விரிகுடாவிலும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான சான்றுகள் வெளிவந்துள்ளன.
இந்தப் புதிய இடங்களில் கடல்வாழ் உயிரினங்களின் இறப்புகள் பாசிப் பூவுடன் தொடர்புடையதா என்பதை நிபுணர்கள் இப்போது சோதனை செய்து வருகின்றனர்.