குயின்ஸ்லாந்தை சேர்ந்த ஒரு தந்தை, தனது மகள் தூங்கிக் கொண்டிருந்தபோது, தலையணை உறைக்குள் ஒரு பாம்பு ஊர்ந்து செல்வதைக் கண்டுள்ளார்.
Gympie-ஐ சேர்ந்த Emily என்ற 11 வயது சிறுமி தனது தலையணை உறையில் ஏதோ அசைவதாக தனது தந்தை Michael Bonney-இடம் கூறினார்.
Emily தன் திரைச்சீலைகள் தலையணை உறையில் உரசிக் கொண்டிருப்பதாக நினைத்தாள். ஆனால் அவள் தலையணையில் ஏதோ அசைவதைக் கவனித்தாள். பின் அப்பா அது என்னவென்று தேடினார்.
தந்தை Michael வெளியே எடுத்து தலையணை உறையை அகற்றியபோது, உள்ளே இருந்த பாம்பு வெளியே விழுந்திருந்தது.
தனது தலையணையில் பாம்பைக் கண்டதும் சிறுமி அதிர்ச்சியடைந்தாள். அவளுடைய தந்தை பாம்பை அகற்ற பாம்பு பிடிப்பவரை அழைத்தார்.
சிறுமியின் தந்தை Michael Bonney கூறுகையில், தனது வீட்டு கதவில் இருந்த ஒரு சிறிய இடைவெளி வழியாக பாம்பு வீட்டிற்குள் நுழைந்ததாக நம்புவதாகக் கூறினார்.
இதற்கு முன்பு பாம்புகள் வீட்டிற்குள் நுழைந்த சந்தர்ப்பங்கள் இருந்திருந்தாலும், அவை எந்தத் தீங்கும் விளைவிக்கவில்லை என்று சிறுமியின் தந்தை கூறியிருந்தார்.
இருப்பினும், குழந்தைகள் படுக்கைக்குச் செல்வதற்கு முன், அவர்கள் தூங்கும் இடங்களைத் தொடர்ந்து சரிபார்த்து சுத்தம் செய்வது மிகவும் முக்கியமாகும் என பெற்றோர்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.