அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், 12 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதைத் தடை செய்யும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார்.
அந்த நாடுகள் Afghanistan, Burma, Chad, Republic of the Congo, Equatorial Guinea, Eritrea, Haiti, Iran, Libya, Somalia, Sudan மற்றும் Yemen என்பனவாகும்.
இந்தத் தடைக்கு மேலதிகமாக, பல நாடுகளிலிருந்து வரும் மக்களுக்கும் கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
அந்த நாடுகள் Burundi, Cuba, Laos, Sierra Leone, Togo, Turkmenistan மற்றும் Venezue என்பனவாகும்.
அமெரிக்கா மற்றும் அதன் மக்களின் தேசிய பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களைப் பாதுகாக்க தாம் செயல்பட வேண்டும் என்று டிரம்ப் ஒரு அறிக்கையை வெளியிட்டார்.
தடைகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட 19 நாடுகளில் பத்து நாடுகள் ஆப்பிரிக்க நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.