மெல்பேர்ணின் தெற்கு Yarra பகுதியில் உள்ள ஒரு கடையில் இருந்து விலையுயர்ந்த துணிகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
திருடப்பட்ட ஆடைகளின் மதிப்பு சுமார் $100,000க்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
கடையின் முன்பக்கக் கதவை உடைக்க சுத்தியலைப் பயன்படுத்தி உள்ளே நுழைந்த சந்தேக நபர், cashmere coats மற்றும் Linda blazers போன்ற அதிக விலை கொண்ட பெண்கள் ஆடைகளைத் திருடினார்.
பின்னர் அவைகளை ஒரு காரில் ஏற்றிக்கொண்டு தப்பிச் சென்றதாக போலீசார் கூறுகின்றனர்.
சந்தேக நபர் Merri-bek மற்றும் Fawkner பகுதிகளில் பல கடைக் கொள்ளைகளிலும் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சந்தேக நபரைக் கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் தொடங்கியுள்ளனர். அவர் ஒரு Caucasus இனத்தைச் சேர்ந்தவர் என்றும், 40 வயதுடையவர் என்றும், திடமான உடலமைப்பு கொண்டவர் என்றும் கருதப்படுகிறது.
மேலும் தகவல் தெரிந்தவர்கள் 1800 333 000 என்ற எண்ணில் குற்றத் தடுப்பாளர்களை அழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.