நெதர்லாந்தின் Amsterdam நகரில் 200 ஆண்டுகள் பழமையான ஆணுறை சிறப்பு கண்காட்சியாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
இது ஒரு செம்மறி ஆடுகளின் பிற்சேர்க்கையிலிருந்து உருவாக்கப்பட்டது என்றும் ஒரு கன்னியாஸ்திரி மற்றும் மூன்று பாதிரியார்களைக் குறிக்கும் தெளிவான அச்சைக் கொண்டுள்ளது.
இந்த அரிய கலைப்பொருள் 1830 ஆம் ஆண்டுக்கு முந்தையது என்றும் கடந்த ஆண்டு ஏலத்தில் Rijksmuseum-ஆல் வாங்கப்பட்டது.
மேலும் குறித்த ஆணுறையை பெற்ற பிறகு, அவர்கள் அதை UV ஒளியால் பரிசோதித்து, அது பயன்படுத்தப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தினர் விஞ்ஞானிகள்.
பிரான்சில் உள்ள ஒரு ஆடம்பரமான விபச்சார விடுதியிலிருந்து இந்த ஆணுறை பெறப்பட்டதாகவும், இதுபோன்ற இரண்டு கலைப்பொருட்கள் மட்டுமே எஞ்சியிருப்பதால், இதை ஒரு மதிப்புமிக்க நினைவுப் பொருளாக தங்கள் அருங்காட்சியகத்தில் தொடர்ந்து காட்சிப்படுத்தப் போவதாக உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
இது காட்சிக்கு வைக்கப்பட்டதிலிருந்து, அருங்காட்சியகம் இளைஞர்களும் முதியவர்களும் நிறைந்த மக்களால் நிரம்பியுள்ளது.
