தென்கிழக்கு ஆஸ்திரிய நகரமான Graz-இல் உள்ள ஒரு பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், குற்றவாளி என்று கூறப்படும் நபர் உட்பட 10 பேர் கொல்லப்பட்டதாக ஆஸ்திரிய போலீசார் தெரிவித்தனர்.
மேயர் Elke Kahr இந்த நிகழ்வுகளை “ஒரு பயங்கரமான சோகம்” என்று விவரித்தார், ஆஸ்திரிய பத்திரிகை நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
இறந்தவர்களில் ஏழு மாணவர்களும் ஒரு பெரியவரும் அடங்குவர்.
12 பேர் காயமடைந்ததாகவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.
தாக்குதல் நடத்தியவர் தனியாகச் செயல்பட்டதாகவும், துப்பாக்கிச் சூடு இன்று காலை 10 மணியளவில் BORG Dreierschützengasse உயர்நிலைப் பள்ளியில் நடந்ததாகவும் போலீசார் நம்புகின்றனர்.
ஆஸ்திரியாவின் இரண்டாவது பெரிய நகரமான Graz, நாட்டின் தென்கிழக்கில் அமைந்துள்ளது மற்றும் சுமார் 300,000 மக்கள் தொகையைக் கொண்டுள்ளது.
ஆஸ்திரிய சான்சலர் Christian Stocker கூறுகையில், இந்த துப்பாக்கிச் சூடு “நமது முழு நாட்டையும் ஆழமாக அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஒரு தேசிய சோகம்” என்றார்.
இந்தக் கொலைகளுக்கு ஜனாதிபதி அலெக்சாண்டர் வான் டெர் பெல்லன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.